முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

உயிரோட இருந்தா தான அவன் கூட பேசுவ.. கள்ளக் காதலால் விபரீதம்..!! மனைவியை தீர்த்து கட்டிய கணவன்..!!

The incident where the wife was hacked to death by the husband in the case of forgery has caused a shock.
01:55 PM Sep 22, 2024 IST | Mari Thangam
Advertisement

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் மனைவியை கணவன் வெட்டிக்கொலை செய்யபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தலைமறைவாக உள்ள கணவரை போலீசார் தேடி வருகின்றனர். மேட்டூர் அருகே உள்ள கொளத்தூர் காவேரிபுரத்தை சேர்ந்தவர் கவிதா(31) இவருக்கு ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகி விவாகரத்து பெற்றுள்ளார். இவருக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளன.

Advertisement

இந்நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு தன்னை விட இளைய நபரை மூன்றாவதாக திருமணம் செய்துகொண்டார். 29 வயதான அந்த நபரின் பெயர் அருணாச்சலம். இருவரும் கொளத்தூரில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தனர். கவிதாவிற்கு வேறொரு நபரும் தொடர்பு இருப்பதாக அருணாச்சலத்திற்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகறாரு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நான்கு மாதத்திற்கு முன்பு இருவருக்கும் தகறாறு ஏற்படவே கவிதா கோவையில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

நேற்று காலை கோவைக்கு சென்ற அருணாச்சலம் மாமியார் வீட்டிற்கு சென்று சமாதானம் பேசி கவிதாவை தன்னுடன் கொளத்தூருக்கு அழைத்து வந்துள்ளார். இந்த நிலையில், இரவு முழுவதும் கவிதா செல்போனில் பேசியதால் ஆத்திரமடைந்த அருணாச்சலம் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றவே ஒரு கட்டத்தில் கவிதாவை தீர்த்துக்கட்ட எண்ணினான். கொளத்தூர் சிவசக்தி நகர் பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்த கவிதாவை அறிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். தலையில் பலத்த காயம் அடைந்த கவிதா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கொளத்தூர் போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தலைமறைவாக உள்ள அருணாச்சலத்தை தேடி வருகின்றனர். கள்ளக்காதல் விவகாரத்தில் பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் கொளத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Read more ; பரபரப்பு.. இரயிலை கவிழ்க்க தண்டவாளத்தில் கேஸ் சிலிண்டர்..!! லோகோ பைலட் துரித செயலால் பெரும் விபத்து தவிர்ப்பு..!!c

Tags :
murderசேலம்
Advertisement
Next Article