For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Court: ஜாபர் சாதிக் தொடுத்த வழக்கு... வீட்டின் சீல் அகற்றம்...! நீதிமன்றம் அதிரடி உத்தரவு...!

06:00 AM Apr 07, 2024 IST | Vignesh
court  ஜாபர் சாதிக் தொடுத்த வழக்கு    வீட்டின் சீல் அகற்றம்     நீதிமன்றம் அதிரடி உத்தரவு
Advertisement

டெல்லி பாட்டியாலா நீதிமன்ற உத்தரவின்படி, மயிலாப்பூரில் உள்ள ஜாபர் சாதிக்கின் வீட்டுக்குப் போடப்பட்டிருந்த சீல் அகற்றப்பட்டுள்ளது.

Advertisement

வீட்டில் வைக்கப்பட்டிருந்த சீலை அகற்றக்கோரி டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் முன்னாள் திமுக நிர்வாகி ஜாபர் சாதிக் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நேற்று நடந்தபோது, ஜாபர் வீட்டுக்கு சீல் வைக்கப்பட்டது ஏன் என்றும், வீட்டில் வைக்கப்பட்டிருந்த சீலை அகற்றுவது குறித்து நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். விசாரணையின் இறுதியில் நீதிபதிகள் வீட்டிற்கு வைக்கப்பட்ட சிலை அகற்ற உத்தரவிட்டனர்.

திமுகவில் இருந்து நீக்கப்பட்ட திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக், ரூ. 2,000 கோடி அளவிற்கு போதை பொருட்களை கடத்தியதாக கூறி மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார். மேலும், சென்னை மயிலாப்பூரில் உள்ள அவரது வீட்டில் சோதனை நடத்திய அதிகாரிகள், சோதனைக்குப் பிறகு வீட்டுக்கு சீல் வைத்தனர். இந்த நிலையில் தற்பொழுது அந்த சீலை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜாபர் சாதிக் நீதிமன்ற காவலில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .

Advertisement