For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

7ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய தலைமை ஆசிரியர்..!! பள்ளியில் வைத்தே பலமுறை பலாத்காரம்..!!

அரசுப் பள்ளியில் 7ஆம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய தலைமை ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
01:36 PM May 29, 2024 IST | Chella
7ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய தலைமை ஆசிரியர்     பள்ளியில் வைத்தே பலமுறை பலாத்காரம்
Advertisement

அரசுப் பள்ளியில் 7ஆம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய தலைமை ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Advertisement

கர்நாடகா மாநிலம் சிக்கபள்ளாப்பூர் மாவட்டம் சிட்லகட்டா கிராமத்தில் அரசுப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், அப்பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி, கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு மருத்துவர் பரிசோதனை செய்தபோது, மாணவி 3 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

இதனைக் கேட்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக சிறுமியிடம், அவரது பெற்றோர் விசாரித்தனர். அப்போது அழுதபடியே பள்ளியின் தலைமை ஆசிரியர் பள்ளி அலுவலக அறையில் வைத்து அடிக்கடி பலாத்காரம் செய்து வந்ததாக கூறியுள்ளார். இதுதொடர்பாக வெளியில் சொல்லக்கூடாது என மிரட்டியுள்ளார். இதையடுத்து, பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்த புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, தலைமை ஆசிரியர் வெங்கடேஷனை கைது செய்து சிறையில் அடைத்தனர். அரசுப் பள்ளிக்குள் மாணவியை தலைமை ஆசிரியர் பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read More : பெண்கள் மேலாடையின்றி நீச்சல் குளத்தில் குளிக்க அனுமதி..!! எங்கு தெரியுமா..?

Tags :
Advertisement