For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

இளம்பெண்ணை வீடு புகுந்து பலாத்காரம் செய்த தந்தை, மகன்..!! தடுக்க வந்த குடும்பத்தினருக்கு நேர்ந்த கதி..!!

A father and son have been arrested for raping a 27-year-old woman working in a brick kiln.
10:59 AM Sep 18, 2024 IST | Chella
இளம்பெண்ணை வீடு புகுந்து பலாத்காரம் செய்த தந்தை  மகன்     தடுக்க வந்த குடும்பத்தினருக்கு நேர்ந்த கதி
Advertisement

இளம்பெண்ணை கட்டாயப்படுத்தி இருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள கல்யாணில் செங்கல் சூளையில் பணிபுரியும் 27 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக தந்தை-மகன் கைது செய்யப்பட்டுள்ளனர். இருவரும் சேர்ந்து அந்த பெண்ணின் குடிசைக்குள் நுழைந்து மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்ததாக முர்பாத் துணைப் பிரிவு போலீஸ் அதிகாரி ஜகதீஷ் ஷிண்டே தெரிவித்தார்.

மேலும், இதை தடுக்க வந்த பெண்ணின் கணவர், மாமனார் மற்றும் மைத்துனர் ஆகியோரை தாக்கிவிட்டு தந்தையும், மகனும் சேர்ந்து பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட அந்த பெண், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அந்த பெண்ணுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே, பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் வன்கொடுமை செய்த அந்த இரண்டு நபர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், இந்த விவகாரம் அங்கு பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Read More : செல்வ மகள் சேமிப்புத் திட்டத்தில் கணக்கு இருக்கா..? சிக்கல் வரப்போகுது..!! உடனே மாத்திடுங்க..!! மத்திய அரசு அதிரடி..!!

Tags :
Advertisement