For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

முன்னாள் துணை சேர்மன் கணவர் வெட்டி படுகொலை...! சங்கரன்கோவிலில் பரபரப்பு...

The ex-vice chairman's husband was hacked to death
09:41 AM Sep 08, 2024 IST | Vignesh
முன்னாள் துணை சேர்மன் கணவர் வெட்டி படுகொலை     சங்கரன்கோவிலில் பரபரப்பு
Advertisement

சங்கரன்கோவில் அருகே முன்னாள் யூனியன் துணை சேர்மனின் கணவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சங்கரன்கோவில் அருகே முன்னாள் மேல நீலித நல்லூர் யூனியன் துணை சேர்மனின் கணவர் வெளியப்பன் (49) என்பவர் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதனால் சங்கரன்கோவில் அருகே பரபரப்பு நிலவு வருகிறது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisement

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் முன்விரோதம் காரணமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டாரா, அல்லது வேறு ஏதாவது நில தகராறு காரணமாக படுகொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். படுகொலை செய்யப்பட்ட இடத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags :
Advertisement