முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

ரத்தன் டாடாவுக்கு சிகிச்சை அளித்த கோவை வைத்தியர்.. நினைவுகளை பகிர்ந்து உருக்கம்..!!

The doctor who treated Ratan Tata fondly shared his memories with him
12:39 PM Oct 11, 2024 IST | Mari Thangam
Advertisement

கோவை மருதமலை அடிவாரத்தில் மூன்று தலைமுறையாக போகா் வலி நீக்கு நிலையம் என்ற பெயரில் வலி நீக்கு வைத்தியம் செய்து வரும் வைத்தியா் கோ.மு.இலக்குமணன், ரத்தன் டாடாவுக்கும் அவருக்குமான தொடர்பு குறித்து பேசினார். அவர் கூறுகையில்,

Advertisement

கடந்த 2019 இல் ரத்தன் டாடாவுக்கு நெருக்கமான ஆா்.கே.கிருஷ்ணகுமாா் திடீரென ஒருநாள் என்னைத் தொடா்பு கொண்டு முதுகு வலி, முழங்கால் வலியால் அவதிப்படும் ரத்தன் டாடாவுக்கு வா்ம சிகிச்சை அளிக்க வேண்டும் என்று என்னிடம் கோரினார். மிகப்பெரிய பணக்காரர் அவர். தலைசிறந்த மருத்துவ நிபுணா்கள் இருக்கும் நிலையில் என்னை எப்படித் தோ்வு செய்தார்கள் என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. மும்பையில் உள்ள அவரது விருந்தினா் மாளிகைக்கு நானும் எனது மனைவி மனோன்மணியும் சென்றோம். அங்கேயே 7 நாள்கள் அங்கேயே தங்கியிருந்து அவரது முதுகு வலி பிரச்னைக்கு வா்ம சிகிச்சை அளித்துவிட்டு எங்களின் பிரத்யேக மூலிகை எண்ணெயையும் அவர்களிடம் கொடுத்துவிட்டு வந்தோம்.

அப்போது அவரது விருந்தினா் மாளிகையில் தங்கியிருந்த எங்களை பாசத்தோடு அவரது குடும்பத்தில் ஒருவராகத் தான் பார்த்துக் கொண்டார். கோவைக்கு வரும்போது உங்கள் வீட்டுக்கு வருவேன் என கூறியதாக அவர் தெரிவித்தார். மிக எளிமையான மனிதர்.. அவர் மறைந்தார் என்ற செய்தி அறிந்ததும் மும்பைக்குச் சென்று அவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினோம் என கண்ணீர் மல்க தெரிவித்தார்.

Read more ; பெத்த அம்மாவை இப்படி செஞ்சிட்டான்..!! டிடிஎஃப் வாசன் டோட்டல் வேஸ்ட்..!! சரியான குப்பை..!! திடீரென பொங்கிய இயக்குனர்..!!

Tags :
covaiRatan Tata
Advertisement
Next Article