For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ஆசிரியர்கள் கவனத்திற்கு... தமிழகம் முழுவதும் இன்று நடைபெறும் கலந்தாய்வு...! மிஸ் பண்ணிடாதீங்க

06:00 AM Nov 27, 2023 IST | 1newsnationuser2
ஆசிரியர்கள் கவனத்திற்கு    தமிழகம் முழுவதும் இன்று நடைபெறும் கலந்தாய்வு     மிஸ் பண்ணிடாதீங்க
Advertisement

பணி நிரவல் கலந்தாய்வு இன்று நடைபெற உள்ளதாக பள்ளி கல்வித்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில்; நடப்பு கல்வியாண்டில் ஆகஸ்ட் 1-ம் தேதி மாணவர் எண்ணிக்கையின்படி அரசுப் பள்ளிகளில் முதுநிலை, பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் மேற்கொள்ளப்பட்டன. அதன் அடிப்படையில் உபரி என கண்டறியப்பட்ட ஆசிரியர்களை அந்தந்த மாவட்டத்துக்குள் பணிநிரவல் செய்ய முடிவு செய்யப்பட்டது.

Advertisement

இதற்கான பணி நிரவல் கலந்தாய்வு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்கள் வழியாக 20-ம் தேதி நடத்தப்படும் என்று அறிவிக்கப் பட்டிருந்தது. நிர்வாக காரணங்களுக்காக நடைபெறவிருந்த பணி நிரவலானது ஒத்தி வைக்கப்பட்டது. பணி நிரவல் கலந்தாய்வு, இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மேற்கொண்டுள்ளனர். எனவே ஆசிரியர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement