திருட்டு போன பாஜக தலைவர் ஜே.பி.நட்டா மனைவியின் SUV கார்...! 3 பேர் அதிரடி கைது...!
டெல்லி கோவிந்த்புரியில் உள்ள சர்வீஸ் சென்டரில் இருந்து திருடப்பட்ட பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவின் மனைவியின் எஸ்யூவி காரை உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் இருந்து இரண்டு வாரங்களுக்கு பிறகு டெல்லி போலீசார் மீட்டுள்ளனர்.
இது தொடர்பாக கடத்தல்காரர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டதாக டெல்லி காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். வாகன திருட்டில் ஈடுபட்டவர்கள் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த சிவன்ஷ் திரிபாதி (23), சலீம் (34), மற்றும் முகமது ரயீஸ் (33) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். வெள்ளை நிற டொயோட்டா ஃபார்ச்சூனர் மார்ச் 19 அன்று தென்கிழக்கு டெல்லியின் கோவிந்த்புரியில் இருந்து திருடப்பட்டது, அதன் டிரைவர் ஜோகிந்தர் அதை சர்வீஸ் சென்டரில் விட்டுவிட்டு சிறிது நேரம் வீடு திரும்பினார்.
ஜே பி நட்டாவின் சொந்த மாநிலமான ஹிமாச்சல பிரதேசத்தில் அவரது மனைவி பெயரில் வாகனம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் ஆட்டோ கடத்துபவர், மேலும் இருவர் மாநிலங்களுக்கு இடையே திருடப்பட்ட சொகுசு கார்களைப் பெறுபவர்கள். அவர்கள் கைது செய்யப்பட்டவுடன், திருடப்பட்ட மற்றொரு க்ரெட்டா காரும், திருடப்பட்ட பார்ச்சூனர் காரும் அவர்களிடம் இருந்து மீட்கப்பட்டது என துணை போலீஸ் கமிஷனர் ராஜேஷ் தியோ கூறினார்.