For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Wayanad landslides | நிலைகுலைய வைத்த நிலச்சரிவு..!! 300-ஐ தாண்டிய உயிர்பலி..!! தற்போதைய நிலை என்ன?

The death toll from the landslides in Wayanad district has crossed 300
10:33 AM Aug 02, 2024 IST | Mari Thangam
wayanad landslides   நிலைகுலைய வைத்த நிலச்சரிவு     300 ஐ தாண்டிய உயிர்பலி     தற்போதைய நிலை என்ன
Advertisement

வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவுகளால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 300 ஐ தாண்டியுள்ளது.

Advertisement

கேரளா மற்றும் தமிழக எல்லைகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதில், கேரளா மாநிலம் வடக்கு கோழிக்கோடு பகுதியில் உள்ள விலாங்காடு மற்றும் மலையங்காடு பகுதிகளில் நேற்று ஏற்பட்ட நிலச்சரிவில் ஒருவர் காணாமல் போயுள்ளார். மேலும், அப்பகுதியில் இருந்த பல்வேறு வீடுகள், பாலம் மற்றும் சாலைகள் சேதமடைந்துள்ளது.

இந்த நிலச்சரிவில் 400-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் சிக்கி கொண்டன. தொடர்ந்து அவர்களை மீட்கும் நடவடிக்கையில் பேரிடர் மீட்புக் குழு ஈடுபட்டு வரும் நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 316 ஆக அதிகரித்துள்ளது. மேலும் ஏராளமானோரை காணவில்லை என்று உறவினர்கள் புகார் அளித்ததால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என அச்சம் எழுந்துள்ளது.

தேடுதல் குழுவில் ஒரு நாய் படையும் இணைக்கப்பட்டுள்ளது. குப்பைகளை அகற்றும் பணியில் ஜேசிபிகள் இயந்திரங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. வயநாட்டில் உள்ள சூரல்மலையில் ஆற்றின் கிளை நதியின் குறுக்கே தற்காலிக பாலம் கட்டும் பணியை ஆயுதப்படையினர் தொடங்கியுள்ளனர். நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட முண்டக்காய் மற்றும் அட்டமலை பகுதிகளுக்கு ஆட்கள் மற்றும் கனரக இயந்திரங்களை கொண்டு செல்வதற்கு இந்த பாலம் முக்கியமானது.

மீட்புக் குழுவினர் நாய்க் குழுவின் உதவியுடன் உயிருக்கு போராடுபவர்களையும், இறந்தவர்களையும் தேடும் பணியைத் தொடங்கியுள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதி முழுவதும் வேரோடு பிடுங்கப்பட்ட மரங்கள், மண் மற்றும் பாறைகளின் அடர்ந்த அடுக்குகளின் கீழ் புதைக்கப்பட்டுள்ள கட்டடங்கள் போன்றவை மீட்புப் பணிகளுக்கு இடையூறாக மாறியுள்ளன. தற்காலிக பாலம் கட்டி முடிக்கப்பட்ட பிறகு அதிகமான ஆட்கள் மற்றும் இயந்திரங்களின் வருகையுடன் குப்பைகளை அகற்றும் பணி வேகமெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read more ; இன்றும் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை..!! இனி இப்படித்தான் இருக்குமா..? நகைப்பிரியர்கள் அதிர்ச்சி..!!

Tags :
Advertisement