For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

இஸ்ரேலின் கொடூரம்!… 4 பேருக்காக 210 பேரை கொன்ற அரக்க குணம்!

Hamas said 210 people were killed in Israeli airstrikes on the central Gaza Strip to rescue four hostages.
08:24 AM Jun 09, 2024 IST | Kokila
இஸ்ரேலின் கொடூரம் … 4 பேருக்காக 210 பேரை கொன்ற அரக்க குணம்
Advertisement

Palestinians Killed:நான்கு பணயக்கைதிகளை மீட்பதற்காக மத்திய காசா முகாம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 210 பேர் கொல்லப்பட்டனர் என்று ஹமாஸ் தெரிவித்துள்ளது.

Advertisement

காஸாவை கிட்டதட்ட தரைமட்டமாக்கி விட்டது இஸ்ரேல் படை. அந்த அளவிற்கு கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி முதல் இஸ்ரேல் படைகள் சரமாரியாக தாக்கி வருகின்றன. 34 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை கொன்று குவித்துள்ளனர். அனைத்து கட்டடங்களும் தரைமட்டமாகி விட்டன. உள்கட்டமைப்பு வசதிகள் தகர்க்கப்பட்டு, எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாத நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது. காஸாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து தப்பித்த மக்கள் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள ரஃபா நகரில் தஞ்சமடைந்தனர்.

இருப்பினும், ரஃபா நகரில் ராணுவத்தை அனுப்பி ஹமாஸ் படைகளை முற்றிலும் அழிக்கும் நடவடிக்கையை இஸ்ரேல் கையில் எடுத்தது. இதில், 1,200 பேரை கொன்றதுடன், அங்கு நடந்த இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற 250க்கும் மேற்பட்டோரையும் கடத்தி சென்றது. கடத்தி சென்றவர்களில் பல வெளிநாட்டினர் உள்ள நிலையில், அவர்களை பிணைக்கைதிகளாக ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு பிடித்து வைத்து மிரட்டியது.

இதையடுத்து, அவர்களை மீட்கும் நோக்கில், ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினரை குறிவைத்து, இஸ்ரேல் ராணுவம் போர் தொடுத்தது. இதனால், பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் வசித்த அப்பாவி மக்கள் 36,700 பேர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்தனர். இந்த போரை நிறுத்தும்படி உலக நாடுகளும், ஐ.நா., அமைப்பும் வலியுறுத்தி வருகின்றன.

எனினும், ஹமாஸ் பயங்கரவாத அமைப்பை முற்றிலும் ஒழிக்கும் வரை இந்த போர் நீடிக்கும் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்து வருகிறார். இதற்கிடையே, கடத்தி செல்லப்பட்ட பிணைக்கைதிகளில் நான்கு பேரை, இஸ்ரேல் ராணுவம் நேற்று மீட்டது. காசாவின் நுஜெய்ரத் அருகே இருவேறு இடங்களில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலின் வாயிலாக, நான்கு பேர் மீட்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

4 பேரை மீட்க இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 210 பாலஸ்தீனர்கள் பலியானதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது. மீட்கப்பட்ட பணயக்கைதிகளை நோவா அர்கமணி, அல்மோக் மெய்ர் ஜான், ஆண்ட்ரே கோஸ்லோவ் மற்றும் ஷ்லோமி ஜிவ் என்று இஸ்ரேல் ராணுவம் முன்பு பெயரிட்டது. "நுசிராத் முகாமில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படுகொலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 210 தியாகிகள் மற்றும் 400 க்கும் மேற்பட்ட காயம் அடைந்துள்ளனர்" என்று அலுவலகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Readmore: மனைவி தவறான உறவு வைத்திருந்தால் கணவர் விவாகரத்து பெறலாம்!… நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

Tags :
Advertisement