For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

'இறக்கும் தருவாயில் அம்மா சொன்ன அந்த வார்த்தை’..!! ’எல்லாமே தலைகீழா மாறிடுச்சு’..!! வனிதா விஜயகுமார் ஓபன் டாக்..!!

In an interview, Vanitha Vijayakumar has revealed some of the secrets that legendary actress Manjula Vijayakumar's mother told her when she was in the hospital near her death.
02:07 PM Jun 14, 2024 IST | Chella
 இறக்கும் தருவாயில் அம்மா சொன்ன அந்த வார்த்தை’     ’எல்லாமே தலைகீழா மாறிடுச்சு’     வனிதா விஜயகுமார் ஓபன் டாக்
Advertisement

பழம்பெரும் நடிகை மஞ்சுளா விஜயகுமார் இறக்கும் தருவாயில், மருத்துவமனையில் இருந்த போது, அம்மா கூறிய சில ரகசியங்களை வனிதா விஜயகுமார் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

Advertisement

திரையுலகில் அறிமுகமான போது, சத்தமில்லாமல் சைலண்டாக நான்கே படத்தில் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனவர் தான் வனிதா விஜயகுமார். இவரின் திருமண விவகாரம் பல மீடியாக்களில் பேசப்பட்டது. இவரை சர்ச்சை நடிகை என சித்தரிக்க வைத்தது அப்பா - மகள் இடையே நடந்த பிரச்சனை தான். வனிதா தன்னுடைய மகன் ஸ்ரீஹரிக்காக நடத்திய பாச போராட்டம் பலரும் அறிந்தது தான். நீதிமன்றம் குழந்தையின் விருப்பப்படி தந்தையிடம் இருக்க அனுமதி கொடுக்க, அதனை ஏற்று கொள்ள முடியாமல் வனிதா துடிக்க, வனிதாவிடம் இருந்து ஸ்ரீஹரியை விஜயகுமார், விமான நிலையத்திற்கு வந்து அவருடன் சண்டையிட்டு அழைத்துச் சென்றார்.

வனிதா கத்தி கதறி பார்த்தும் எந்த பலனும் இல்லாததால், தன் தந்தையை பற்றி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இதுவே வனிதா மீது மஞ்சுளாவுக்கு வெறுப்பு வர காரணமாக அமைந்தது. வனிதா தனது மகளே கிடையாது, அவள் ஒரு ராட்சசி. அவள் என் வயிற்றில் பிறந்ததை நினைக்கும்து கேவலமாக உள்ளது என்றெல்லாம் திட்டித்தீர்த்தார் மஞ்சுளா. இந்நிலையில், அவர்கள் குடும்பத்திற்குள் நடந்த சில விஷயங்களை பற்றியும், தன்னுடைய தாய் மஞ்சுளாவின் கடைசி நிமிடத்தில் நடந்த விஷயங்களையும் தான் ஷகிலா எடுத்த பேட்டியில் கலந்து கொண்டபோது வனிதா கூறியுள்ளார்.

தனது தாயின் குடிப்பழக்கம் பற்றி பேசிய வனிதா, "இந்த குடியால் அம்மாவுக்கு 3 முறை மஞ்சள் காமாலை வந்தது. ஆனாலும், குடிப்பழக்கத்தை நிறுத்தவில்லை. ஒருமுறை பேட்டி கொடுக்கும் போதே, செம்ம போதையில் இருந்ததை அனைவருமே பார்த்தனர். அம்மா மிகவும் கிரிட்டிக்கல் நிலையில், ICU-வில் அனுமதிக்கப்பட்ட போது, மருத்துவர்கள் இன்னும் 72 மணிநேரத்தில் இறந்துவிடுவார் என கூறிவிட்டனர். அந்த சமயத்தில் என் அம்மாவின் பாசம் வெளிப்பட்டது. தன்னிடம் சில ரகசியங்களை கூறினார்.

உன்னை அப்படியே விட்டுடுங்க இந்த குடும்பம் என பயந்தார். எனவே, இந்தியாவின் தலைசிறந்த வக்கீலான ராம்ஜெத்மலானியை அழைத்து அனைத்து சொத்து பத்திரங்களிலும் என்னுடைய பெயரை சேர்க்க வேண்டும் என கூறினார். அதோடு தான் பல உண்மைகளை சொல்ல வேண்டும் அதனை வீடியோவாக எடு என்றும் கூறினார். ஆனால், நான் அதை செய்யவில்லை. அதேபோல் என்னுடையை தந்தையின் கையை பிடித்து வனிதாவை விட்றாதீங்க என சொன்னார். ஆனால், என் அம்மா இறந்ததும் எல்லாமே தலை கீழாக மாறிவிட்டது.

என் அம்மாவுக்கு இறுதிச்சடங்கை செய்ய விடாமல் என் குடும்பத்தினரே என்னை தடுத்தனர். பின்னர் சரத்குமாரும், ராதாரவியும் தான் என்னை அழைத்து இறுதிச்சடங்கை செய்ய வைத்தனர். அன்னைக்கு அவங்க மட்டும் இல்லேனா என் தாய்க்கு என்னால் இறுதிச்சடங்கு கூட செய்ய முடியாம போயிருக்கும். இப்போ வரைக்கும் எனக்கு சொத்தில் உரிமையில்லைனு சொல்றாங்க. அதில் எனக்கு நம்பிக்கை இல்லை. சொத்து ஒருவேளை பிரிக்கப்பட்டால் என்னுடைய மகள்களுக்கும் ஒரு பங்கு கிடைக்க வேண்டும் அதுவே எனது விருப்பம்” என வனிதா கூறியுள்ளார்.

Read More : விவசாயிகளுக்கு செம குட் நியூஸ்..!! ரூ.78.67 கோடி ஒதுக்கீடு..!! தமிழக வேளாண்துறை அறிவிப்பு..!!

Tags :
Advertisement