முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

’அந்த மனசு இருக்கே’..!! தென் மாவட்டங்களுக்கு நிவாரணப் பொருட்களை அனுப்பி வைக்கும் கேரளா..!! என்னென்ன தெரியுமா..?

11:10 AM Dec 23, 2023 IST | 1newsnationuser6
Advertisement

கடந்த வாரம் பெய்த அதி கனமழையால் தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்கள் கடும் வெள்ள சேதத்தை சந்தித்துள்ளது. மக்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். இரண்டு மாவட்டங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. மக்கள் மீண்டு வர முடியாமல் தவித்து வருகின்றனர். தமிழ்நாடு அரசு மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வருகிறது. மேலும், தன்னார்வலர்களும் மக்களுக்கு உதவிகளை செய்து வருகின்றனர்.

Advertisement

இந்நிலையில், அண்டை மாநிலமான கேரளாவும் தமிழகத்திற்கு உதவி செய்துள்ளது. இது தொடர்பாக முதல்வர் பினராயி விஜயன் தனது முகநூல் பக்கத்தில், ”தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ கேரளா தயாராகி வருகிறது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய கிட் வடிவில் உதவிகளை வழங்குவதற்கு இது உத்தேசிக்கப்பட்டுள்ளது.

வெள்ளை அரிசி - 5 கிலோ, துவரம் பருப்பு, உப்பு, சர்க்கரை, கோதுமை தலா 1 கிலோ, ரவை - 500 கிராம், மிளகாய்த் தூள் - 300 கிராம், சாம்பார் தூள் - 200 கிராம், மஞ்சள் தூள், ரசம் பொடி, ரசப்பொடி தலா 100 கிராம், சோப்பு, பற்பசை, சீப்பு, லுங்கி, நைட்டி தலா ஒன்று, பல் துலக்குதல் - 4, சூரியகாந்தி எண்ணெய் - 1 லிட்டர் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இவை திருவனந்தபுரம் கனகக்குன் அரண்மனை எதிரே உள்ள மாநில பேரிடர் மேலாண்மை ஆணைய அலுவலகத்தில் சேகரிக்கப்பட்டு வருகிறது. இம்முயற்சியில் அனைவரும் கலந்து கொண்டு சக மனிதர்களுக்கு உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.

Tags :
கேரள மாநிலம்தென் மாவட்ட மக்கள்நிவாரணப் பொருட்கள்பினராயி விஜயன்
Advertisement
Next Article