For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

முஸ்லிம் இளைஞரை வெறி கொண்டு தாக்கிய கொடூரன்கள்..!! வெளியான அதிர்ச்சி வீடியோ..!!

04:32 PM Apr 01, 2024 IST | Chella
முஸ்லிம் இளைஞரை வெறி கொண்டு தாக்கிய கொடூரன்கள்     வெளியான அதிர்ச்சி வீடியோ
Advertisement

உத்தரப்பிரதேசத்தில் முஸ்லிம் இளைஞரை ஒரு கும்பல் கொடூரமாக தாக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து 2 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும் பலரைத் தேடி வருகின்றனர்.

Advertisement

உத்தரப்பிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டத்தில் உள்ள கண்ட்லா கிராமத்தில் டூவீலரில் இளைஞர் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை 10-க்கும் மேற்பட்டோர் தடி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் கொடூரமாக தாக்கினர். வாகனத்தில் இருந்து கீழே விழுந்த அந்த இளைஞர் மீது அந்தக் கும்பல் கொலைவெறி தாக்குதல் நடத்துகிறது. அவர் மயக்கமடையும் வரை அந்தக் கும்பல் தடிகளால் தாக்கி விட்டு தப்பியோடி விடுகிறது.

இந்த வீடியோ வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கும்பலால் தாக்குதலுக்கானவர் ரிஸ்வான் என்று விசாரணையில் தெரியவந்தது. அவரைத் தாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில், இந்த தாக்குதல் சம்பந்தமாக இருவரை கைது செய்துள்ளதாக போலீஸார், இன்று தெரிவித்துள்ளனர். மற்ற குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று கண்காணிப்பாளர் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

Read More : Udhayanidhi Stalin | அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை..!!

Advertisement