முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

தீவிரவாதிகள் தாக்குதல்!. பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு!. வெளியான தாக்குதல்தாரியின் சிசிடிவி காட்சிகள்!

Terrorists attack! 5 people died! CCTV footage of the attacker released!
06:04 AM Oct 24, 2024 IST | Kokila
Advertisement

Turkey: துருக்கி பாதுகாப்பு அலுவலகம் மீது துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்திய தாக்குதல்தாரிகளின் சிசிடிவி புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

Advertisement

துருக்கியின் அங்காராவில் உள்ள பாதுகாப்பு தலைமை செயலகம் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்த தொடங்கினர். முதலில் 3 பேர் வரை உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது பலியானோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இந்த தாக்குதலில் 22 பேர் வரை படுகாயமடைந்து இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதற்கு பதிலடியாக 2 தீவிரவாதிகள் துருக்கி பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலுக்கு இன்னும் யாரும் பொறுப்பேற்காத நிலையில் இதற்கு குர்தீஸ்தான் தொழிலாளர் கட்சியை சேர்ந்தவர்கள் காரணமாக இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளதாக அதிகாரிகள் கூறினர். துருக்கி அமைச்சர் வழங்கிய தகவலின் படி, தாக்குதல் நடத்திய ஆண் ஒருவர் மற்றும் பெண் ஒருவர் என இரண்டு பேர் நடுநிலையாக்கப்பட்டனர் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால் இவர்களை தவிர தாக்குதலில் வேறு யாரும் ஈடுபட்டார்களா என்பது தெரியவரவில்லை.

இந்நிலையில் கையில் துப்பாக்கியுடன் தாக்குதல்தாரிகள் செல்லும் சிசிடிவி காட்சிகள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப் பட்டுள்ளது. அதில் அவர்கள் துப்பாக்கி வைத்து இருப்பதுடன் முதுகு பை ஒன்றை அணிந்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Readmore: வியாபாரிகளுக்கு குட் நியூஸ்…! தீபாவளி முன்னிட்டு இரவு 1 வரை கடைகள் இயங்க அனுமதி…!

Tags :
5 people diedcctv footageTerrorists attackturkey
Advertisement
Next Article