பட்டப்பகலில் பயங்கரம்..!! நடுரோட்டில் கீழே தள்ளிவிட்டு பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி..!! சேலத்தில் அதிர்ச்சி..!!
சேலம் மாவட்டம் மன்னார்பாளையம், அன்னை சத்யா நகர் பகுதியில் கடந்த 15ஆம் தேதி பெண் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அப்பெண்ணை பின் தொடர்ந்தவாறு நடந்து வந்துகொண்டிருந்த நபர் ஒருவர் சாலையில் யாரும் இல்லாததை அறிந்து திடீரென அப்பெண்ணை கட்டியணைத்து கீழே தள்ளியுள்ளார். மேலும், அந்த பெண்ணை சாலையிலேயே பலாத்காரம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது அருகில் இருந்தவர்கள் வீட்டை விட்டு வெளியே வந்ததும் அந்த நபர் எதுவும் நடக்காதது போல் அங்கிருந்து கிளம்பிவிட்டார். இதனை சற்றும் எதிர்பாராத அப்பெண்ணோ மயக்க நிலைக்கு சென்று சிறிது நேரம் கழித்து இயல்பு நிலைக்கு திருப்பினார். இதற்கிடையே, பெண்ணிடம் அத்துமீறிய நபர் உடனடியாக அங்கிருந்து மாயமானார். இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண், வீராணம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
விசாரணையில், இச்செயலில் ஈடுபட்டது மன்னார்பாளையம் அடுத்த அல்லிகுட்டை பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்பது தெரியவந்தது. இதையடுத்து, கண்ணனை கைது செய்த போலீசார், அவரிடம் விசாரணை நடத்தினர். இவர் ஏற்கனவே இதே பகுதியில் உள்ள மூதாட்டி உள்பட சில பெண்களிடம் அத்துமீறியுள்ளார். மேலும் மது, கஞ்சா என தீவிர போதைக்கு அடிமையான கண்ணன், மனநலம் தொடர்பாகவும் சிகிச்சை பெற்று வந்ததாகவும், கடந்த இரண்டு ஆண்டுகளாக மருந்து மாத்திரை உட்கொண்டு வந்த நிலையில், தற்போது மீண்டும் இப்படிப்பட்ட செயலில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது.
Read More : ரேஷன் அட்டைதாரர்களே..!! இந்த தேதியை நோட் பண்ணுங்க..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!