முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

ஆபாச படம்.! 5-ஆம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.! POCSO சட்டத்தில் ஆசிரியர் கைது.!

10:35 AM Feb 18, 2024 IST | 1newsnationuser4
Advertisement

சேலம் அருகே மாணவிகளுக்கு ஆபாச படம் காட்டி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் ஆசிரியர் போக்சோ(Pocso) சட்டத்தில் கைது செய்யப்பட்டிருக்கும் நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சேலம் மாவட்டம் மேட்டூர் மேச்சேரி பகுதியில் அமைந்துள்ள அரசு துவக்க பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் ஜியா உல் ஹக்(44).

Advertisement

இவர் அந்தப் பள்ளியில் பயின்று வரும் 5-ஆம் வகுப்பு மாணவிகளுக்கு தனது செல்போனில் ஆபாச படங்களை காட்டி தொடர் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது. இது தொடர்பாக மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் புகார் தெரிவித்துள்ளனர். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவிகளின் பெற்றோர் குறித்த சம்பவம் தொடர்பாக பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் புகார் தெரிவித்தனர்

இதனையடுத்து தலைமையாசிரியர் மேச்சேரி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இந்தப் புகாரை தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்த நிலையில். ஆசிரியர் ஜியா உல் ஹக் தலைமறைவானார். இதனைத் தொடர்ந்து அவரை தீவிரமாக தேடும் பணி நடைபெற்று வந்தது.

இந்நிலையில் பாலியல் குற்றவாளி ஆசிரியர் ஓமந்தூர் அருகே பதுங்கி இருப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து அங்கு சென்ற காவல்துறையினர் ஆசிரியர் ஜியா உல் ஹக்கை கைது செய்து அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். 5-ஆம் வகுப்பு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags :
Obscene videoSalemsexual harraassmentstudentsteacher arrest
Advertisement
Next Article