Tasmac | மதுப்பிரியர்கள் அதிர்ச்சி..!! டாஸ்மாக் கடை திறப்பு நேரம் மாற்றம்..!! மக்களவை தேர்தலையொட்டி நடவடிக்கை..!!
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சியினரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று வேட்புமனுவை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாளாகும். மேலும், நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் முடிந்து ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.
இந்நிலையில், மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பரப்புரைக்கு வருவோருக்கு அரசியல் கட்சியினர் ரூ.500 முதல் 1,000 ரூபாய் வரை கொடுப்பதாகவும், இரவு நேரத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு அழைத்துச் சென்று குவாட்டர் முதல் ஆஃப் வரை வாங்கித் தருவதாகவும் புகார் எழுந்துள்ளது. இதனால் டாஸ்மாக் கடை திறப்பு நேரத்தை குறைக்க வேண்டும் என்றும், குறிப்பாக இரவு 10 மணிக்கு பதில் 8 மணியுடனே டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Read More : JOB | ரூ.1.40 லட்சம் சம்பளத்தில் சூப்பர் வேலை..!! டைம் இல்ல..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!