For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Tasmac | மதுப்பிரியர்கள் ஷாக்..!! தமிழ்நாட்டில் இழுத்து மூடப்படும் டாஸ்மாக் கடைகள்..!!

10:48 AM Mar 23, 2024 IST | 1newsnationuser6
tasmac   மதுப்பிரியர்கள் ஷாக்     தமிழ்நாட்டில் இழுத்து மூடப்படும் டாஸ்மாக் கடைகள்
Advertisement

இந்திய தேர்தல் ஆணையம் நாடாளுமன்ற தேர்தல் தேதியை கடந்த சனிக்கிழமை அறிவித்தது. அதன்படி, நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதையொட்டி தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆங்காங்கே சோதனை சாவடிகள் அமைத்து தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதேபோல் பறக்கும் படை அதிகாரிகளும் பல்வேறு இடங்களுக்கு சென்று திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement

இந்நிலையில், வாக்குப்பதிவு நடக்கும் தினத்திலும், அதற்கு முந்தயை தினத்திலும் அசம்பாவிதங்களை தடுக்க டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், தமிழ்நாட்டில் ஏப்ரல் 17ஆம் தேதி மாலை 6 மணி முதல் ஏப்ரல் 19ஆம் தேதி மாலை 6 மணி வரை டாஸ்மாக் கடைகளை மூட வேண்டுமென தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. வாக்குப்பதிவு முடியும் நேரத்திற்கு, 48 மணி நேரத்துக்கு முன்பாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளிலும் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதனால் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஜூன் 4ஆம் தேதியும் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Read More : ”இரட்டை இலை சின்னத்தை யாருக்கும் ஒதுக்கக் கூடாது”..!! தேர்தல் ஆணையத்தில் பரபரப்பு மனு..!!

Advertisement