முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்.! மூச்சுத் திணறல் ஏற்பட்டு 10 வயது தமிழக சிறுமி பலி.!

02:41 PM Dec 10, 2023 IST | 1newsnationuser4
Advertisement

தமிழகத்தைச் சேர்ந்த 10 வயது சிறுமி பெற்றோருடன் சபரிமலைக்கு ஐயப்பனை தரிசிக்க சென்ற போது மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. சிறுமியின் உடல் பம்பை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

Advertisement

சபரிமலை ஐயப்பன் கோவிலில் சீசனை முன்னிட்டு கூட்டம் அலைமோதி வருகிறது. கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் பல லட்சக்கணக்கான மக்கள் ஐயப்பனை தரிசிக்க சபரிமலை சென்று வந்துள்ளனர். இந்நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த குழுவில் தனது பெற்றோருடன் ஐயப்பனை தரிசிக்க சென்று இருக்கிறார் பத்மஸ்ரீ என்ற எட்டு வயது சிறுமி.

பம்பையில் இருந்து அப்பாச்சி மேடு வழியாக பாதயாத்திரை சென்று ஐயப்பனை வழிபடுவது வளமையாக இருந்து வருகிறது. இந்தப் பாதயாத்திரைக்கு பெற்றோருடன் சென்றபோது சிறுமி பத்மஸ்ரீக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு இருக்கிறது. இதனைத் தொடர்ந்து முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட அவர் மேல் சிகிச்சைக்காக பம்பை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு வைத்து சிறுமி பத்மஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவரது உடல் பம்பை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருக்கிறது. சிறுமியின் இறப்பு தொடர்பாக பேசிய அவரது பெற்றோர் பத்மஸ்ரீக்கு சிறுவயது முதலே மூச்சுத் திணறல் மற்றும் இதயம் சார்ந்த பிரச்சனைகள் இருந்து வந்ததாக தெரிவித்திருக்கின்றனர். சென்ற இடத்தில் சிறுமி உயிர் இழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags :
A girldiedSabarimalaSuffocationTragedy
Advertisement
Next Article