முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

30க்கும் அதிகமான மாணவிகளின் ஆபாச படங்கள்.! வகுப்பறையில் பாலியல் சீண்டல்.! போக்சோ சட்டத்தில் தமிழாசிரியர் கைது .!

12:59 PM Dec 14, 2023 IST | 1newsnationuser4
Advertisement

விழுப்புரம் மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவிகளை கலை நிகழ்ச்சிகள் மற்றும் விழாக்களுக்கு அழைத்துச் செல்வதாக கூறி பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு இருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisement

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள திருவக்கரை அரசு பள்ளியில் 30க்கும் அதிகமான மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளியில் ஒன்பதாவது வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். இதனைத் தொடர்ந்து அவரைக் காப்பாற்றிய பெற்றோர்கள் மாணவியிடம் விசாரித்த போது பல திடுக்கிடும் அதிர்ச்சி சம்பவங்கள் வெளியாகி இருக்கிறது.

அந்தப் பள்ளியில் தமிழாசிரியராக பணியாற்றும் மகேஸ்வரன் என்பவர் மாணவியை அரசு விழாவுக்கு அழைத்துச் செல்வதாக கூறி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டது தெரிய வந்திருக்கிறது. மேலும் பள்ளியிலும் ஆபாச படங்களை காட்டி மாணவியை பாலியல் சீண்டலில் ஈடுபட்டதும் தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து மாணவியின் பெற்றோர் தலைமை ஆசிரியரிடம் புகார் தெரிவித்தனர். இந்த மாணவியின் பெற்றோர் புகார் அளித்ததை தொடர்ந்து மேலும் ஐந்து மாணவிகளும் ஆசிரியர் மீது புகார் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல்துறையினர் தமிழாசிரியர் மகேஸ்வரனை கைது செய்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். மேலும் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவரது செல்போனிலிருந்து 30க்கும் அதிகமான மாணவிகளின் ஆபாச வீடியோக்கள் கைப்பற்றப்பட்டிருக்கிறது. இதனையடுத்து ஆசிரியர் மகேஸ்வரன் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்.

Tags :
POCSO Actschool studentssuicide attemptTamil teachervillupuram
Advertisement
Next Article