முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

ரூ.70,000 சம்பளத்தில் தமிழக அரசு வேலை..!! விண்ணப்பிக்க 2 நாள் தான் இருக்கு..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

07:31 AM Jan 29, 2024 IST | 1newsnationuser6
Advertisement

சென்னை அண்ணாசாலையில் உள்ள தமிழ்நாடு அரசின் எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை அலுவலகத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Advertisement

பணியிட விவரங்கள் : ஜூனியர் மெக்கானிக் (01), ஜூனியர் எலக்ட்ரிஷியன் (01), அஸ்சிஸ்டண்ட் ஆஃப்செட் மெஷின் டெக்னிஷியன் (19), சிறப்பு மொழி டிடிபி ஆபரேட்டர் (01), டைம் கீப்பர் (02) என மொத்தம் 24 பணியிடங்கள் நிரப்படுகின்றன.

கல்வி தகுதி : 10ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான படிப்புடன் பணியிடங்கள் சம்பந்தப்பட்ட துறையில் ஐடிஐ படித்து இருக்க வேண்டும். சிறப்பு மொழி டிடிபி ஆபரேட்டர் பணிக்கு பிசிஏ அல்லது பி.எஸ்.சி கம்ப்யூட்டர் சயின்ஸ் உள்ளிட்ட டிகிரியுடன் டைப் ரைட்டிங் திறனும் அவசியம். டைம் கீப்பர் பணிக்கு 10ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான படிப்பு முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு : வயது வரம்பை பொறுத்தவரை 18 வயது முதல் 32 வயதுக்குள் இருக்க வேண்டும். பிசி, எம்.பி.சி. உள்ளிட்ட பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 34 ஆகவும் , எஸ்.சி/எஸ்.டி ஆகிய பிரிவினருக்கு 37 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சம்பளம் : ஜுனியர் மெக்கானிக், எலக்ட்ரிஷியன், ஆஃப்செட் மெஷின் டெக்னிஷியன் ஆகிய பணியிடங்களுக்கு ரூ.19,500 - ரூ.71,900 வரை சம்பளம் கிடைக்கும். டிடிபி ஆபரேடர் பணிக்கு ரூ.35,600 - ரூ.1,30,800 வரையும் , டைம் கீப்பர் பணிக்கு ரூ.18,200 - ரூ.67,100 வரையும் சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு முறை : எழுத்துதேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி :

எழுதுபொருள் (ம) அச்சுத்துறை ஆணையரகம் 11, அண்ணா சாலை, சென்னை-2 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப கடைசி நாள் : 31.01.2024 ஆகும்.

தேர்வு அறிவிப்பை படிக்க https://www.stationeryprinting.tn.gov.in/pdf/B2-21429-2023.pdf
கிளிக் செய்யவும்.

Tags :
அச்சுத்துறைஎழுதுபொருள்சென்னைதமிழக அரசு வேலை
Advertisement
Next Article