For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

சூரியஒளி மின்னுற்பத்தி பூங்காக்கள் அமைப்பதில் தமிழக அரசு படுதோல்வி...!

06:30 AM Jan 09, 2024 IST | 1newsnationuser2
சூரியஒளி மின்னுற்பத்தி பூங்காக்கள் அமைப்பதில் தமிழக அரசு படுதோல்வி
Advertisement

சூரியஒளி மின்னுற்பத்தி பூங்காக்கள் அமைப்பதில் தமிழக அரசு படுதோல்வி அடைந்துள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றச்சாட்டு முன் வைத்துள்ளார்.

இது குறித்து அவர் தனது அறிக்கையில்; தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் தலா 50 மெகாவாட் திறன்கொண்ட சூரிய ஒளி மின்னுற்பத்தி பூங்காக்கள் அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து இரு ஆண்டுகளுக்கு மேலாகிவிட்ட நிலையில் இன்று வரை ஒரு மாவட்டத்தில் கூட சூரிய ஒளி பூங்கா அமைக்கப்படவில்லை. தமிழ்நாட்டை சூரியஒளி மின்னுற்பத்தியில் முதன்மை மாநிலமாக மாற்ற அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டிக்கத்தக்கது.

Advertisement

காற்றாலை மின்னுற்பத்தியில் இந்தியாவின் முதன்மை மாநிலமாகத் திகழும் தமிழ்நாட்டை சூரிய ஒளி மின்னுற்பத்தியிலும் முதன்மை மாநிலமாக மாற்ற வேண்டும் என்று -பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது. 2021&ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த திமுக, தமிழ்நாட்டில் 6000 மெகாவாட் திறன் கொண்ட சூரிய ஒளி மின்திட்டங்கள் அடுத்த இரு ஆண்டுகளில் செயல்படுத்தப்படும்; அவற்றில் 2000 மெகாவாட் திறன் கொண்ட சூரிய ஒளி மின்னுற்பத்தித் திட்டங்களை தமிழ்நாடு மின்சார வாரியமே நேரடியாக செயல் படுத்தும்; இதற்காக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் குறைந்தது 50 மெகாவாட் திறன் கொண்ட சூரிய ஒளி மின்னுற்பத்தி பூங்கா ஒன்று அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அரசு அறிவித்தது.

சூரியஒளி மின்னுற்பத்தித் திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழகம் படுதோல்வியடைந்து விட்டது என்பது தான் உண்மை. எனவே, தமிழ்நாட்டில் அறிவிக்கப்பட்ட சூரிய ஒளி மின்திட்டங்களின் செயல்பாட்டை அரசு விரைவுபடுத்த வேண்டும். அதற்காக சூரிய ஒளி, காற்றாலை உள்ளிட்ட மரபுசாரா எரிசக்தித் திட்டங்களை செயல்படுத்த வசதியாக புதிய எரிசக்தித் துறை என்ற பெயரில் தனி அமைச்சகத்தை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும்.

Tags :
Advertisement