For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

”காசு வாங்கிட்டு பேசுற”..!! ”நீ என்ன புரோக்கரா”..? சவுக்கு சங்கரை வறுத்தெடுத்த தயாரிப்பாளர் ராஜன்..!!

10:19 AM Mar 19, 2024 IST | 1newsnationuser6
”காசு வாங்கிட்டு பேசுற”     ”நீ என்ன புரோக்கரா”    சவுக்கு சங்கரை வறுத்தெடுத்த தயாரிப்பாளர் ராஜன்
Advertisement

திரைப்பட இசை வெளியீட்டு விழா ஒன்றில் சவுக்கு சங்கரை தயாரிப்பாளர் கே.ராஜன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

Advertisement

விழா மேடையில் அவர் கே.ராஜன் பேசுகையில், “உண்மையிலேயே நான் இதுவரை ஆண்ட்ரியாவை தமிழ் பெண் என்று நினைக்கவே இல்லை. உங்களது பிறந்த இடம் எது என்று கேட்டபோது, அவர் சென்னை தான் என்றார். அப்பா எங்கே வேலை பார்த்தார் என்று கேட்கும்போது ஐகோர்ட் என்றார். சொன்ன உடனே ஒரு அடி தள்ளி உட்கார்ந்தேன். தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை, தமிழ் நடிகர், நடிகைகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். பஞ்சம் வந்தால் மட்டும் பிற மொழிகளில் இருந்து நாம் கலைஞர்களை இங்கு கொண்டு வந்து கொள்ளலாம். அவர்களும் நம் சகோதரர்கள்தான்.

கலைஞர் நூற்றாண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. குறுகிய காலத்தில் அப்படிப்பட்ட ஒரு மாற்று ஏற்பாட்டை செய்தது பெரிய விஷயம். நிகழ்ச்சியை சிரமத்திற்கு இடையே தான் நடத்தினார்கள். அந்த நிகழ்ச்சியில் எல்லோருக்கும் பணமானது கொடுத்து விடப்பட்டது. கடைசியாக ஒரு சிலருக்கு பணம் கொடுக்க முடியவில்லை. அதற்கு காரணம் ஸ்பான்சர் தருகிறேன் என்று சொன்னவர்கள், அந்த நேரத்தில் தரவில்லை. அதுதான் காரணம். தொழிலாளர்களுக்கு எங்களுடைய ஆட்கள் என்றுமே துரோகம் செய்ய மாட்டார்கள்.

ஆனால், சிலர் காசு கொடுத்து சில சவுக்குகளை பேச வைக்கிறார்கள். அவருக்கு ஒன்றுமே தெரியாது. ஆனால், அவர்தான் பணம் வாங்கி கொடுத்த புரோக்கர் போல கலைஞர் விழாவை பற்றி பேசி இருக்கிறார். கலைஞர் கேட்ட போதெல்லாம் எங்களுக்கு உதவி செய்தவர், எங்களுக்காக நிலத்தை கொடுத்தவர். அதற்காக இந்த திரையுலகம் அவருக்காக நன்றி கடன் பட்டிருக்கிறது. அந்த கடனுக்காக தான் அந்த நிகழ்ச்சியானது நடத்தப்பட்டது. ஆனால், சவுக்கு சங்கர் யாரிடமோ கூலி வாங்கிக் கொண்டு இப்படி பேசிக் கொண்டிருக்கிறார். அந்த நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின் ஹைதராபாத்தில் உள்ள ராமாஜிராவ் ஃபிலிம் சிட்டி போல, அதைவிட பிரமாண்டமாக, படப்பிடிப்பு நடத்துவதற்கு இடத்தை அமைத்து தருவதாக அந்த நிகழ்வில் உறுதி கொடுத்தார்.

இவ்வளவு எல்லாம் செய்த முதல்வரை யாரோ காசு கொடுத்தார் என்பதற்காக கண்டபடி பேசுகிறார் சங்கர். முதல்வரை திறமையே இல்லாதவர் என்றும் அவர் பதவியை உதயநிதி ஸ்டாலினிடம் கொடுத்து விட்டு செல்ல வேண்டும் என்றும் பேசுகிறார். நான் கேட்கிறேன்.. அதை சொல்வதற்கு நீ யார்.. உனக்கு என்ன தகுதி இருக்கிறது அதைப்பற்றி எல்லாம் பேச… கலைஞரைப் பற்றி பேசுவதற்கு அவருக்கு அருகதை இல்லை” என்று கடுமையாக விமர்சித்தார்.

Read More : அதிமுக என்ற அடையாளத்தை இழந்த ஓபிஎஸ்..!! தனிக்கட்சி தொடங்குகிறாரா..? வெளியான பரபரப்பு தகவல்..!!

Advertisement