For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

’காதலியின் காலணியை கழற்றி’..!! ’கரண்ட் ஷாக் கொடுத்து கொன்றோம்’..!! நடிகர் தர்ஷன் பரபரப்பு வாக்குமூலம்..!!

Kannada actor Darshan has confessed to brutally assaulting his fan Renukaswamy before he was murdered.
08:38 AM Sep 12, 2024 IST | Chella
’காதலியின் காலணியை கழற்றி’     ’கரண்ட் ஷாக் கொடுத்து கொன்றோம்’     நடிகர் தர்ஷன் பரபரப்பு வாக்குமூலம்
Advertisement

கன்னட நடிகர் தர்ஷன், தனது ரசிகர் ரேணுகாசாமி கொலை செய்யப்படுவதற்கு முன்பு, அவரை கொடூரமாக தாக்கியதை ஒப்புக்கொண்டுள்ளார். சுமார் 4 ஆயிரம் பக்க குற்றப்பத்திரிகையில் வெளியான அதிர்ச்சி தகவல்களின் பின்னணி குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

Advertisement

ஒட்டுமொத்த கர்நாடகாவையும் கதிகலங்க வைத்த இளைஞரின் கொலை வழக்கில், நடிகர் தர்ஷன் உட்பட 17 பேர் கைது செய்யப்பட்டனர். தனது ரசிகர் ரேணுகாசாமியை, கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். நடிகர் தர்ஷனின் தோழியும் நடிகையுமான பவித்ரா கவுடாவுக்கு, ரேணுகாசாமி என்ற இளைஞர் ஆபாசமாக மெசேஜ் அனுப்பியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த தர்ஷன், தனது ரசிகர் என்றும் பாராமல் ரேணுகாசாமியை ஆள்வைத்து அடித்துக் கொன்றதாக புகார் எழுந்தது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட தர்ஷன், ரேணுகாசாமியை தாக்கியதை போலீசிடம் அளித்த வாக்குமூலத்தில் ஒப்புக்கொண்டார். இந்த வழக்கில் 3,991 பக்க குற்றப்பத்திரிகை அண்மையில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், தர்ஷன் மற்றும் அவரது உதவியாளர்கள் ரேணுகாசாமியை எப்படி சித்ரவதை செய்து கொன்றனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

தர்ஷன் தனது ரசிகர் மன்ற நிர்வாகி மூலம், ரேணுகாசாமியை சித்ரதுர்காவில் இருந்து பெங்களூருவுக்கு கடந்த ஜூன் 8ஆம் தேதி அழைத்து வந்துள்ளார். அங்கு, ஒரு கொட்டகையில் அடைத்து வைத்து அவரை, கொடூரமாக தாக்கியுள்ளனர். சம்பவத்தன்று, மாலையில் தர்ஷன் அங்கு வந்தபோது, ஏற்கனவே கொலைவெறித் தாக்குதலுக்கு ஆளான இளைஞர் மிகவும் சோர்வாக இருந்துள்ளார். இருந்த போதும், தர்ஷன் அந்த இளைஞரின் மார்பு, கழுத்து மற்றும் தலையில் கையாலும், மரக்கட்டையாலும் அடித்து துன்புறுத்தியுள்ளார்.

அப்போது உடன் இருந்த நடிகை பவித்ரா கவுடாவை, அவரின் காலணியை கழற்றி ரேணுகாசாமியை அடிக்க கூறியதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார். தொடர்ந்து சித்ரவதை செய்யப்பட்டும், கரண்ட் ஷாக் கொடுத்தும் அவரை கொடூரமாக கொலை செய்துள்ளார் தர்ஷன். ரேணுகாசாமியை கொலை செய்து, அதை மூடி மறைப்பதற்காக தர்ஷன், தனது உதவியாளர் பிரதோஷுக்கு 40 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார். ரேணுகாசாமி கொலை வழக்கில் நடிகை பவித்ரா தான் முக்கிய குற்றவாளி என்றும், அவர் தான் கொலை செய்ய தூண்டியதாகவும், சதிக்கு உடந்தையாக இருந்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Read More : மத்திய அரசின் அசத்தல் அறிவிப்பு..!! இனி இவர்களுக்கு ரூ.5 லட்சம் வரை இலவசம்..!! குட் நியூஸ்..!!

Tags :
Advertisement