For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

டி20 உலகக் கோப்பை வெற்றி அணிவகுப்பு.. கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் மருத்துவமனையில் அனுமதி!!

At least 11 people were hospitalised with minor injuries or dizziness after a massive crowd gathered for India's T20 World Cup victory parade in South Mumbai; nine are now stable.
04:03 PM Jul 05, 2024 IST | Mari Thangam
டி20 உலகக் கோப்பை வெற்றி அணிவகுப்பு   கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் மருத்துவமனையில் அனுமதி
Advertisement

தெற்கு மும்பையில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை வெற்றி அணிவகுப்புக்காக திரளான மக்கள் திரண்டதால், பலருக்கு மூச்சு திணறல், மயக்கம் ஏற்பட்டது. நெரிசலில் சிக்கி காயமடைந்த 11 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

Advertisement

டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் மேற்கிந்திய தீவுகளின் பார்படாஸில் இருந்து தனி விமானத்தில் டெல்லி வந்தனர். அப்போது டெல்லி விமான நிலையத்தின் வெளியே திரளாக காத்திருந்த ஏராளமான ரசிகர்கள் இந்திய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனையடுத்து இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு காலை 11 மணியளவில் பிரதமர் மோடி காலை உணவளித்து வாழ்த்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்தியா தனது வெற்றி அணிவகுப்பை மும்பையில் தொடங்கியது. டி20 உலகக் கோப்பை சாம்பியன்களைக் காணத் திரண்டிருந்த கிரிக்கெட் ரசிகர்களின் கடல் அலைகளுக்கு இடையே இந்த அணிவகுப்பு வழியாகச் செல்கிறது. இந்திய அணியின் வருகைக்காக மும்பை மரைன் டிரைவில் மக்கள் மற்றும் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது.  கூட்டத்தை கட்டுப்படுத்த மரைன் டிரைவ் மற்றும் வான்கடே மைதானத்தில் 5,000 பணியாளர்களை மும்பை போலீசார் நிறுத்தியுள்ளனர். இந்த நிகழ்வு பெருமளவில் வெற்றிகரமாக நடந்தாலும், சில ரசிகர்கள் காயம் அடைந்து மூச்சு விடுவதில் சிரமம் அடைந்தனர்.

இதனால் பலருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. கூட்ட நெரிசலில் 11 பேருக்கு காயம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அதிகாரி ஒருவர் இன்று தெரிவித்தார். அவர்களின் உடல்நிலை தற்போது சீரான நிலையில் இருப்பதாக ஜேஜே குழும மருத்துவமனைகளின் டீன் தெரிவித்தார்.

Read more : தொடர் மழை எதிரொலி | தமிழகத்தில் செங்கல் விலை திடீர் உயர்வு!! ஒப்பந்ததாரர்கள் ஷாக்..

Tags :
Advertisement