முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

பாலியல் வழக்கை வாபஸ் பெறுமாறு நடிகையை மிரட்டும் எஸ்.வி சேகர்..! வெளியான ஆடியோ..!

02:19 PM Jun 14, 2024 IST | Kathir
Advertisement

நடிகை காயத்ரி சாய்க்கு பத்திரிகையாளர் பிரகாஷ் எம்.ஸ்வாமி பாலியல் தொல்லை கொடுத்ததாக போலீசில் கொடுத்த புகாரை திரும்ப பெறுமாறு, நடிகர் எஸ்.வி சேகர் தன்னை மிரட்டுவதாக நடிகை காயத்ரி சாய் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.

Advertisement

பத்திரிகையாளர் பிரகாஷ் எம்.ஸ்வாமி, நடிகை காயத்ரி சாய்க்கு, பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அந்த நடிகை கொடுத்திருந்தார். இந்த புகார் மனுவை திரும்ப பெறுமாறு கூறி நடிகர் எஸ்.வி சேகர், நடிகை காயத்ரி சாய் அவர்களை தொடர்புகொண்டு பேசியுள்ளார். நடிகர் எஸ்.வி சேகர் பாலியல் வழக்கை திரும்பப்பெற கட்டப்பஞ்சாயத்து செய்வதாகவும், மிரட்டுவதாகவும், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி நடிகை காயத்ரி சாய் புகார் அளித்துள்ளார்.

முதலமைச்சர் அலுவலகத்தின் பெயரை பயன்படுத்தி தன்னை மிரட்டும் எஸ்.வி சேகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நடிகை காயத்ரி சாய் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் எஸ்.வி சேகர் தொலைபேசியில் தொடர்புகொண்டு பாலியல் வழக்கை திரும்ப பெற வேண்டும் என மிரட்டும் அடியோவையும் நடிகை காயத்ரி சாய் வெளியிட்டுள்ளார். 5 வருடங்களாக நடைபெறும் இந்த விவகாரத்தில் தற்போது நடிகர் எஸ்.வி சேகர் பேசிய ஆடியோ தற்போது வெளியாகியுள்ளது.

அவர் வெளியிட்டுள்ள அந்த ஆடியோவில் நடிகர் எஸ்.வி சேகர் பத்திரிகையாளர் பிரகாஷ் எம்.ஸ்வாமிக்கு ஆதரவாக, பாலியல் வழக்கு தொடர்பாக பேசுவதும், அவர்களை வாபஸ் வாங்க, கட்டாய படுத்துவதும், மேலும் அரசாங்கத்தின் பெயர்களை கூறியிருப்பதும் வெளிவந்துள்ளது. பத்திரிகையாளர் பிரகாஷ் எம்.ஸ்வாமிக்கு ஆதரவாக பாலியல் புகாரை திரும்ப பெறுமாறு நடிகர் எஸ்.வி சேகர் இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
actress gayathri saiactress gayathri sai about prakash M samy
Advertisement
Next Article