For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

'ஜோ'க்காக குந்தவை கதாபாத்திரத்தை அசினிடம் கொடுக்காத சூர்யா..! பத்திரிக்கையாளர் உடைத்த உண்மை..!

07:41 PM Nov 16, 2023 IST | 1Newsnation_Admin
 ஜோ க்காக குந்தவை கதாபாத்திரத்தை அசினிடம் கொடுக்காத சூர்யா    பத்திரிக்கையாளர் உடைத்த உண்மை
Advertisement

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக இருப்பவர் சூர்யா. இவர் விஜய் நடித்த நேருக்கு நேர் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து பல படங்களில் நடித்திருந்தாலும் பாலா இயக்கத்தில் வெளியான நந்தா திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. அதன் பிறகு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார்.

Advertisement

இவரும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான ஜோதிகாவும் கடந்த 2006 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இவர்கள் இருவரும் திருமணத்திற்கு முன்பு நடித்த சில்லுனு ஒரு காதல் திரைப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்தத் திரைப்படம் குடும்ப ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.

முன்னிலையில் இந்த திரைப்படம் தொடர்பாக சுவாரசியமான தகவல் ஒன்றை பகிர்ந்திருக்கிறார் பத்திரிகையாளர் செய்யாறு பாலு. சில்லுனு ஒரு காதல் திரைப்படத்தில் ஜோதிகா மற்றும் பூமிகா நடித்திருந்தனர். அதில் பூமிகா கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு முதலில் அசினிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாம். ஆனால் அந்த நேரத்தில் சினிமாவின் உச்சத்தில் இருந்த அசின் தனக்கு ஜோதிகா நடித்த குந்தவை கதாபாத்திரம் தான் வேண்டும் என அடம் பிடித்திருக்கிறார்.

ஆனால் சூர்யா மற்றும் படக்குழுவினர் இதற்கு மறுப்பு தெரிவித்து விட்டனர். நடிகர் சூர்யா குந்தவை கதாபாத்திரத்தில் ஜோதிகா தான் நடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். இதனால் அசின் பூமிகா கதாபாத்திரத்தை ஏற்றுக் கொள்ளாமல் அந்த திரைப்படத்திலிருந்து விலகியதாக தெரிவித்திருக்கிறார் மூத்த பத்திரிகையாளரான செய்யாறு பாலு.

Tags :
Advertisement