முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

யூடியூப் பார்த்து அறுவை சிகிச்சை..!! 15 வயது சிறுவன் பரிதாப மரணம்..!! தலைமறைவான போலி டாக்டர்..!!

Ajith Kumar has performed an operation to remove the gallstone of the boy.
02:18 PM Sep 10, 2024 IST | Chella
Advertisement

பீகார் மாநிலம் சரன் மாவட்டத்தில் மதவ்ரா பகுதியில் அஜித் குமார் என்பவர் அதே பகுதியில் கிளினிக் ஒன்றை நடத்தி வந்துள்ளார். அவரது கிளினிக்கிற்கு கடந்த வெள்ளிக்கிழமை இரவு வாந்தி மற்றும் வயிற்று வலியால் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுவனை அவனது பெற்றோர் சிகிச்சைக்காக அழைத்து வந்துள்ளனர். அந்த சிறுவனுக்கு பித்தப்பை கல்லை அகற்றும் ஆபரேஷனை அஜித் குமார் மேற்கொண்டுள்ளார்.

Advertisement

யூடியூப்பை பார்த்து அவர் இந்த சிகிச்சையை செய்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், சிறுவனின் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால், மேல் சிகிச்சைக்காக பாட்னா மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அஜித்குமார் அறிவுறுத்தியுள்ளார். அதன்படி, பாட்னா மருத்துவமனைக்கு சிறுவனை கொண்டு சென்றபோது, வழியிலேயே சிறுவன் உயிரிழந்துவிட்டான்.

இதையறிந்த அஜித் குமார் பூரி தலைமறைவாகி விட்டார். இச்சம்பவம் தொடர்பாக சிறுவனின் பெற்றோர் காவல்துறையிடம் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான போலி மருத்துவர் அஜித் குமார் பூரியை வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read More : மாணவர்களே நோட் பண்ணிக்கோங்க..!! காலாண்டு தேர்வுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை தெரியுமா..?

Tags :
அறுவை சிகிச்சைபீகார் மாநிலம்போலி மருத்துவர்
Advertisement
Next Article