For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ராமர் கோவில் கும்பாபிஷேகம்: "ராம ஜென்ம பூமி செல்வதில் மகிழ்ச்சி.." முதல் ஆளாக அயோத்தி புறப்பட்ட சூப்பர் ஸ்டார் "ரஜினிகாந்த்".!

11:28 AM Jan 21, 2024 IST | 1newsnationuser7
ராமர் கோவில் கும்பாபிஷேகம்   ராம ஜென்ம பூமி செல்வதில் மகிழ்ச்சி    முதல் ஆளாக அயோத்தி புறப்பட்ட சூப்பர் ஸ்டார்  ரஜினிகாந்த்
Advertisement

இந்தியாவின் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வான ராமர் கோவில் கும்பாபிஷேகம் நாளை உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தி நகரில் நடைபெற இருக்கிறது. நூற்றாண்டு கனவான ராமர் கோவில் கட்டி முடிக்கப்பட்டு அதன் கும்பாபிஷேக விழா மற்றும் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யும் நிகழ்வு அயோத்தி நகரில் நாளை நண்பகல் 12:20 மணிக்கு தொடங்கி நடைபெற இருக்கிறது.

Advertisement

இந்த நிகழ்விற்கு அரசியல் தலைவர்கள் சினிமா நட்சத்திரங்கள் தொழிலதிபர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் என ஆயிரக்கணக்கான விருந்தினர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். பாலிவுட் சினிமாவின் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களான விராட் கோலி மகேந்திர சிங் தோனி மற்றும் தொழிலதிபர்கள் ஆன முகேஷ் அம்பானி கௌதம் அதானி ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களில் அடங்குவர்.

இந்த கும்பாபிஷேக நிகழ்வு மற்றும் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யும் நிகழ்வை தலைமை ஏற்று பிரதமர் மோடி நடத்த இருக்கிறார். இந்நிலையில் இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக கோலிவுட் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று அயோத்தி நகருக்கு புறப்பட்டு சென்றார். ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு புறப்படுவதற்கு முன் செய்தியாளர்களை சந்தித்த அவர் ராம ஜென்ம பூமியில் நடைபெறும் விழாவில் கலந்து கொள்வது மகிழ்ச்சி என தெரிவித்துள்ளார். மேலும் ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு தமிழகத்தில் இருந்து புறப்படும் முதல் விஐபி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement