முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

சூப்பரோ சூப்பர்..!! இனி ஆண்களுக்கு இணையாக பெண்களும் சம்பளம் வாங்கலாம்..!! Kerala அரசு அதிரடி..!!

07:17 AM Feb 23, 2024 IST | 1newsnationuser6
Advertisement

ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கு சம ஊதியம் கிடைப்பது உறுதி செய்யப்படும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.

Advertisement

கேரள மாநிலம் கொச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அம்மாநில முதல்வர் பினராயி விஜயன், ”சமீப காலம் வரை பெண்களின் கல்விக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், இனி பணிகளிலும் அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். வேலைகள் பெண்களுக்கு சாதகமாக இருக்க வேண்டும். இதற்காக, பணியிடங்களில் பாலின தணிக்கை நடத்தப்பட்டு, சம ஊதியம் உறுதி செய்யப்படும்.

உயர்கல்வித் துறையின் கீழ் உள்ள அனைத்து, மாநில பல்கலைக்கழகங்களிலும் மாணவியருக்கு மாதவிடாய் விடுமுறையை அறிமுகப்படுத்தியதன் மூலம் கேரளா ஒரு முன்மாதிரி மாநிலமாக திகழ்ந்துள்ளது. 1997இல் நாட்டிலேயே முதல் மாநிலமாக பெண்களுக்கு தனியாக பாலின பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதிக பெண்கள் உயர்கல்வி பயிலும் மாநிலத்தில் கேரள முதலிடத்தில் உள்ளது. இதேபோல், பெண்கள் அதிகம் பணிபுரியும் மாநிலங்கள் வரிசையிலும் முதலிடத்துக்கு வரவேண்டும்.

கேரளாவில், பாலின பட்ஜெட் இந்தாண்டு மொத்த பட்ஜெட்டில் 21.5 சதவீதமாக உள்ளது. 2017-18 முதல் ஆண்டுதோறும் பாலின பட்ஜெட் மாநில பட்ஜெட்டுடன் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. கேரளாவில் புதிதாக தொடங்கப்பட்ட தொழில் நிறுவனங்களில் 40 சதவீத தொழில்முனைவோர் பெண்களாவர். மேலும், புதிதாக துவங்கப்படும் தொழில் துறையில் ரூ.8,000 கோடி முதலீட்டில் ரூ.1,500 கோடி முதலீடு பெண் தொழில்முனைவோரிடமிருந்து பெறப்பட்டுள்ளது. சமூக முன்னேற்றமடைய பெண்களுக்கு நிதி சுதந்திரம் தேவை” என்று பேசினார்.

English Summary : Kerala will conduct gender audit, ensure equal pay for women: CM Pinarayi Vijayan

Read More : Corona தடுப்பூசியால் ஏற்படும் பக்க விளைவுகள்..!! இது உயிருக்கே ஆபத்தாம்..!! ஆய்வு முடிவில் அதிர்ச்சி..!!

Advertisement
Next Article