முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

நடுரோட்டில் இறங்கி சண்டையிட்ட ’சுந்தரா டிராவல்ஸ்’ பட நடிகை ராதா..!! சிசிடிவி ஆதாரத்துடன் போலீசில் புகார்..!!

05:56 PM Mar 20, 2024 IST | 1newsnationuser6
Advertisement

'சுந்தரா டிராவல்ஸ்’ திரைப்பட நடிகை ராதா, தனது மகனுடன் சேர்ந்து நடுரோட்டில் இளைஞர் ஒருவரைத் தாக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

நடிகர்கள் முரளி, வடிவேலு இணைந்து காமெடியில் கலக்கிய ‘சுந்தரா டிராவல்ஸ்’ படத்தில் கதாநாயகியாக நடித்தவர் ராதா. இவர், தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகை ராதா மீதும் அவரது மகன் தருண் மீதும் பிரான்சிஸ் ரிச்சர்ட் எனும் இளைஞர் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்தப் புகாரில் ராதாவும் அவருடைய மகனும் சேர்ந்து தன்னைத் தாக்கியதாக சிசிடிவி வீடியோ ஆதரத்துடன் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக காவல்துறை நடத்திய விசாரணையில், பிரான்சிஸ் ரிச்சர்ட் கொடுத்த புகார் உண்மை என்பது தெரியவந்துள்ளது. நடிகை ராதாவும், அவரது மகன் தருணும் சேர்ந்து பிரான்சிஸை தாக்கும் சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆராய்ந்தனர். இதுகுறித்து தீவிர விசாரணை நடத்திய போலீசாருக்கு, இரு தரப்பினருக்கும் இடையே ஏற்கெனவே முன்விரோதம் இருந்தது தெரியவந்துள்ளது.

நடிகை ராதாவை கேலி செய்ததாக ரிச்சர்ட் மீது ஏற்கெனவே நிலுவையில் வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாகவே இவர்களுக்கு இடையில் மீண்டும் பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு தனது இரண்டாவது கணவர் வசந்தராஜா தன்னை அடித்துத் துன்புறுத்துவதாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்து பரபரப்பை நடிகை ராதா பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Read More : Lok Sabha | தஞ்சை, விருதுநகர் உள்ளிட்ட 5 தொகுதிகள் தேமுதிகவுக்கு ஒதுக்கீடு..!! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு..!!

Advertisement
Next Article