For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

கோடை விடுமுறை..!! பள்ளிக்கல்வித்துறை தெளிவான விளக்கம்..!! மாணவர்களே இதை நோட் பண்ணீங்களா..?

08:09 AM Apr 05, 2024 IST | Chella
கோடை விடுமுறை     பள்ளிக்கல்வித்துறை தெளிவான விளக்கம்     மாணவர்களே இதை நோட் பண்ணீங்களா
Advertisement

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 1 முதல் 9ஆம் வகுப்புகளுக்கான முழு ஆண்டு மற்றும் 3ஆம் பருவத் தேர்வுகள் ஏப்.2 முதல் 12ஆம் தேதிக்குள் நடத்தப்படும். தொடர்ந்து மாணவர்களுக்கு கோடை விடுமுறை ஏப்.13-ம் தேதி முதல் வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது.

Advertisement

இந்நிலையில், ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தேர்வு தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டன. அதன்படி ஏப்.10, 12இல் நடைபெறவிருந்த தேர்வுகள் ஏப்.22, 23-க்கு தள்ளிவைக்கப்பட்டன. அதேநேரம் கோடை விடுமுறை தொடர்பாக ஆசிரியர்கள், மாணவர்களிடம் குழப்பம் நிலவி வருகிறது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.

1 முதல் 3-ம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளுக்கு ஏப்.5-ம் தேதியுடன் பருவத் தேர்வுகள் முடிவடைகிறது. அவர்களுக்கு ஏப்.6 முதல் கோடை விடுமுறையாகும். அதேபோல், 4 முதல் 9-ம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு ஏப்.6 முதல் 21-ம் தேதி வரை ரம்ஜான் பண்டிகை மற்றும் தேர்தல் பணிகள் நிமித்தம் காரணமாக விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த மாணவர்களுக்கு மீண்டும் ஏப்.22, 23-ம் தேதிகளில் அறிவியல் மற்றும் சமூக அறிவியல் தேர்வுகள் நடைபெறும்.

தொடர்ந்து ஏப்.24-ல் தொடங்கி கோடை விடுமுறை வழங்கப்படும். பள்ளி திறப்பு நாள் பின்னர் அறிவிக்கப்படும். அதேநேரம் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் இறுதி வேலை நாளான ஏப்.26ஆம் தேதி வரை அரசு விடுமுறை இல்லாத தினங்களில் பள்ளிக்கு வருகை புரிவது அவசியம். அந்த நாட்களில் மாணவர் சேர்க்கை, விடைத்தாள் மதிப்பீடு மற்றும் இதர அலுவல் பணிகளை மேற்கொள்ள வேண்டும்” என பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.

Read More : ஊருக்குள் உலா வரும் சிறுத்தை..!! இன்று 9 பள்ளிகளுக்கு விடுமுறை..!! மயிலாடுதுறை ஆட்சியர் அறிவிப்பு..!!

Advertisement