For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Suicide Attempt | புதுச்சேரி சிறுமி வழக்கில் முக்கிய குற்றவாளி தற்கொலை முயற்சி..!! பெரும் பரபரப்பு..!!

11:01 AM Mar 11, 2024 IST | 1newsnationuser6
suicide attempt   புதுச்சேரி சிறுமி வழக்கில் முக்கிய குற்றவாளி தற்கொலை முயற்சி     பெரும் பரபரப்பு
Advertisement

புதுச்சேரி சிறுமி கொலை வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள முக்கிய குற்றவாளியான விவேகானந்தன், இன்று தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார்.

Advertisement

புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியில் மாயமான 5-ஆம் வகுப்பு பள்ளி மாணவி அங்குள்ள கால்வாயில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று சடலமாக மீட்கப்பட்டாா். முத்தியால்பேட்டை போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், சோலை நகரை சோந்த 6 பேருக்கு இந்த சம்பவத்தில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதில் 5 போ சிறுவா்கள் என்பதும், அனைவரும் போதைப் பொருள்களைப் பயன்படுத்தி வருவதும் தெரியவந்தது.

இந்த வழக்கில் புதுச்சேரி முத்தியால்பேட்டையை சேர்ந்த 56 வயதான விவேகானந்தன் மற்றும் 19 வயதேயான கருணாஸ் ஆகிய இருவரையும் போக்சோ சட்டத்தில் கைது நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்துள்ளனர். இவர்கள் இருவரையும் போலீஸ் காவலில் எடுக்க அனுமதி கோரிய வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ள நிலையில், முக்கிய குற்றவாளியான விவேகானந்தன் சிறையில் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். சக கைதி கருணாஸ் கூச்சலிட்ட நிலையில், சிறைக் காவலர்கள் விவேகனந்தனை காப்பாற்றியதாக கூறப்படுகிறது.

Read More : ADMK | கட்சியை கலைத்து விட்டு அதிமுகவில் இணைந்த முக்கிய புள்ளி..!! பெருகும் ஆதரவால் குஷியில் எடப்பாடி..!!

Advertisement