For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

திடீர் திருப்பம்..!! என்னிடம் அவர் எதுவுமே சொல்லவில்லை..!! ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி பரபரப்பு அறிக்கை..!!

Aarthi has accused Jayam Ravi of announcing the split without his consent.
10:41 AM Sep 11, 2024 IST | Chella
திடீர் திருப்பம்     என்னிடம் அவர் எதுவுமே சொல்லவில்லை     ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி பரபரப்பு அறிக்கை
Advertisement

சில மாதங்களாக ஜெயம் ரவியும் – ஆர்த்தியும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் இருவரும் விவாகரத்து முடிவில் இருப்பதாகவும் வதந்திகள் பரவின. ஆனால், அதை உறுதிப்படுத்தும் விதமாக நடிகர் ஜெயம் ரவி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

Advertisement

அதில், “வாழ்க்கை என்பது பல்வேறு அத்தியாயங்களைக் கொண்ட ஒரு பயணம், ஒவ்வொன்றும் அதன் சொந்த சவால்கள் மற்றும் வாய்ப்புகளுடன் வருகிறது. என்னுடைய பயணத்தை திரைப்படங்கள் வாயிலாகவும், திரையல்லாத இடங்களிலும் தொடர்ந்து பார்த்து வருபவர்களுக்கும், திரை துறை நண்பர்கள், பத்திரிக்கை, ஊடக துறை மற்றும் சமுக ஊடக நண்பர்கள், என் ரசிகர்கள் என அனைவரிடமும் நேர்மையாகவும் வெளிப்படையாகவும் இருக்க முயற்சி செய்து வருகிறேன். எனவே, மிகவும் நெஞ்சம் கசந்த ஒரு தனிப்பட்ட செய்தியை உங்களுடன் பகிர வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன்.

நீண்டகால யோசனை, மற்றும் பல பரிசீலனைக்குப் பிறகு, ஆர்த்தி உடனான எனது திருமண வாழ்வில் இருந்து விலகுவது என மிகவும் கடினமான ஒரு முடிவை எடுத்துள்ளேன். இந்த முடிவு எளிதாக எடுக்கப்பட்டதல்ல, என்னை சார்ந்தவர்களின் நலனை கருத்தில் கொண்டும் அவர்களின் நல்வாழ்விற்காக எடுக்கப்பட்டது.

இந்த நேரத்தில் எனது தனியுரிமையையும், எனக்கு நெருக்கமானவர்களின் தனியுரிமைகளுக்கு மதிப்பளிக்கும்படி அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். இந்த முடிவு எனது சொந்த முடிவாகும். இந்த விஷயம் என்னுடைய தனிப்பட்ட விஷயமாகவே இருக்க வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன். என்னுடைய முன்னுரிமை எப்போதும் எனது நடிப்பின் மூலம் எனது ரசிகர்கள் மற்றும் மக்களுக்கு மகிழ்ச்சி மற்றும் பொழுதுபோக்கு அளிக்க வேண்டும் என்பதே.

நான் என்றும், எப்போதும் உங்கள் ஜெயம் ரவியாகவே இருக்க விரும்புகிறேன், நீங்கள் எனக்கு அளிக்கும் ஆதரவை நன்றியுடன் உணர்கிறேன், எனக்கு தொடர்ந்து ஆதரவு தந்தமைக்கு நன்றி” எனத் தெரிவித்திருந்தார். இந்த அறிக்கை ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், தனது ஒப்புதல் இல்லமால் ஜெயம் ரவி பிரிவை அறிவித்ததாக ஆர்த்தி குற்றம்சாட்டியுள்ளார்.

அதாவது, ஜெயம் ரவி வெளியிட்ட விவாகரத்து அறிவிப்பை பார்த்து அதிர்ச்சியாகி கிடக்கிறேன். எனக்கு இதுபற்றி எதுவுமே தெரியப்படுத்தவில்லை. ஜெயம் ரவி தனிப்பட்ட முறையில் இந்த முடிவை எடுத்து அறிவித்துள்ளார். நான் என்னுடைய இரு மகன்களின் வருங்காலத்தை நினைத்துக் கவலைப்படுகிறேன். கருத்து வேறுபாடு குறித்து ஜெயம் ரவியிடம் பேச முயற்சித்த போது, அவர் அதற்கு அனுமதியே வழங்காமல் இப்படியொரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

மேலும், என்னை பற்றியும் என் குடும்பத்தை பற்றியும் தவறான தகவல்கள் பரவவும் இது காரணமாக அமைந்து விட்டது. ஜெயம் ரவி இப்படி செய்வார் என கொஞ்சமும் நினைத்து பார்க்கவில்லை. 18 வருடங்கள் ஒன்றாக இருந்த வாழ்க்கை முற்றிலுமாக உடைந்து போய் விட்டது. எப்போதும் போல இந்த முறையும் பத்திரிகையாளர்கள் இந்த தருணத்தில் எனக்கு துணையாக நிற்பதற்கு நன்றி. எங்கள் குடும்ப பிரைவசியை காப்பாற்ற உதவுங்கள். வதந்திகளை யாருமே பரப்ப வேண்டாம். ஒரு தாயாக என்னுடைய முதல் கடமையே என்னுடைய இரு குழந்தைகளையும் பேணி காக்க வேண்டும். அபாண்டமாக என் மீது வீண் பழியை யாரும் சுமத்த வேண்டாம். இதுதொடர்பாக என்ன செய்ய வேண்டுமோ அதை நான் செய்ய காத்திருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Read More : அண்ணனின் திருமணத்திற்கு பார்ட்டி கொடுத்த தம்பி..!! மதுவை ஊற்றிக் கொடுத்து சுத்துப் போட்ட நண்பர்கள்..!! பயங்கரம்..!!

Tags :
Advertisement