முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் திடீர் பரபரப்பு..!! பார்வையாளர்கள் மீது தடியடி நடத்திய போலீஸ்..!!

04:12 PM Jan 17, 2024 IST | 1newsnationuser6
Advertisement

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை காண வந்த பார்வையாளர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி மிக விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த போட்டியை காண ஏராளமான பார்வையாளர்கள் வருகை தந்துள்ளனர். ஜல்லிக்கட்டு வாடிவாசலை காண வேண்டும் என பார்வையாளர்கள் ஆர்வத்துடன் வாடி வாசலில் இருக்கும் பகுதியை நோக்கி குவிந்து வருகின்றனர். குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், மற்றவர்கள் ஏமாற்றத்தில் விரக்தி அடைந்தனர்.

சிலர் எப்படியாவது போட்டியை காண வேண்டும் என காவல்துறை அமைத்துள்ள பாதுகாப்பு வேலி பகுதியை நோக்கி கூட்டம் கூட்டமாக முண்டியடித்தனர். கூட்டம் தொடர்ந்து குவிந்து வந்ததை அடுத்து கூட்டத்தை கலைக்க போலீசார் திடீரென தடியடி நடத்தினர். ஜல்லிக்கட்டு போட்டியை காண ஆர்வத்துடன் கேரளாவில் இருந்தும் வருகை தந்த பார்வையாளர்கள், கூட்டம் அதிகமாக இருந்ததால் மிகுந்த ஏமாற்றமடைந்தனர்.

Tags :
அலங்காநல்லூர்மதுரை மாவட்டம்ஜல்லிக்கட்டு போட்டி
Advertisement
Next Article