For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

மோடியிடம் கேட்டிருக்கலாம்!... நிர்மலா சீதாராமனை சீண்டிய சுப்பிரமணிய சாமி!… வருமான வரி அறிக்கையை வெளியிட வேண்டும்!

08:07 AM Mar 31, 2024 IST | Kokila
மோடியிடம் கேட்டிருக்கலாம்     நிர்மலா சீதாராமனை சீண்டிய சுப்பிரமணிய சாமி … வருமான வரி அறிக்கையை வெளியிட வேண்டும்
Advertisement

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தேர்தலில் போட்டியிட மோடியிடம் பணம் கேட்டிருக்கலாம் என்று பாஜக மூத்த நிர்வாகி சுப்பிரமணிய சாமி தெரிவித்துள்ளார்.

Advertisement

மத்திய நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் உள்ளார். இவருக்கு தமிழ்நாடு அல்லது ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள ஏதாவது ஒரு இடத்தில் மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்ததாகவும், தன்னிடம் தேவையான பணம் இல்லை என்பதால் மறுத்து விட்டதாகவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். நாட்டின் நிதியமைச்சரிடமே போட்டியிடுவதற்கான பணம் இல்லையா? என்று கேள்வி எழுந்தது.

இதற்கு பதில் அளித்த நிர்மலா சீதாராமன் "என்னுடைய சம்பளம், என்னுடைய சம்பாத்தியம், என்னுடைய சேமிப்பு எல்லாம் என்னுடையது. இந்தியாவின் ஒருங்கிணைந்த நிதி எனக்கு சொந்தம் கிடையாது" என்றார். இந்நிலையில், இது தொடர்பாக, பாஜக மூத்த நிர்வாகி சுப்பிரமணிய சாமி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தேர்தலில் போட்டியிட மோடியிடம் பணம் கேட்டிருக்கலாம். மேலும் அவர் 2004-05 மற்றும் 2022-23க்கான வருமான வரி அறிக்கையை வெளியிட்டிருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் தேர்தலில் போட்டியிடாததற்கான உண்மையான காரணத்தை நிர்மலா சீதாராமன் கூறியிருக்க வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

Readmore: FASTag-ல் கேஒய்சியை புதுப்பிக்க இன்றே கடைசி!… தேசிய நெடுஞ்சாலைத்துறை அறிவுரை!

Tags :
Advertisement