For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

மாணவர்கள் தொடர் போராட்டம்..!! காலவரையின்றி மூடப்பட்ட கல்லூரி..!!

Kumbakonam Government Men's Arts College has been closed indefinitely as the students have been protesting against the Tamil department professor.
01:52 PM Aug 28, 2024 IST | Chella
மாணவர்கள் தொடர் போராட்டம்     காலவரையின்றி மூடப்பட்ட கல்லூரி
Advertisement

கும்பகோணம் அரசு ஆண்கள் கலைக் கல்லூரியின் தமிழ்த் துறை பேராசிரியரைக் கண்டித்து மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருவதால், அக்கல்லூரி காலவரையன்றி மூடப்பட்டது.

Advertisement

கும்பகோணம் அரசு ஆண்கள் கலைக் கல்லூரியின் முதுநிலை தமிழ்த்துறை பேராசிரியர் ஜெயவாணி ஸ்ரீ. இவர், 2ஆம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்பறையில் பாடம் நடத்தியபோது சாதிய ரீதியாகவும், பெண்களை தரக்குறைவாகவும் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாணவ - மாணவியர் கல்லூரி முதல்வரிடம் கடிதம் கொடுத்தனர். ஆனால், பேராசிரியர் மீது கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனால், மாணவ, மாணவியர் கடந்த 15ஆம் தேதி முதல் வகுப்புகளை புறக்கணித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 'இளைஞர் அரண்' என்ற அமைப்பின் சார்பில், மாணவ, மாணவியர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், கல்லூரி காலவரையின்றி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாகக் கல்லூரி முதல்வர் அ.மாதவி வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”கல்லூரியில் நிலவும் அசாதாரண சூழல் கருதி, கல்லூரி ஆட்சிமன்றக் குழுவின் தீர்மானத்தின் படி, மறு உத்தரவு வரும் வரை கல்லூரி காலவரையன்றி மூடப்படுகிறது” என்று அறிவித்துள்ளார்.

Read More : ’மாணவர்களின் வாழ்க்கையோடு விளையாடாதீங்க’..!! மத்திய அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!!

Tags :
Advertisement