For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

அதிர்ச்சி...!மாணவர் தூக்கிட்டு தற்கொலை...! சென்னை ஐஐடி பேராசிரியர் பணியிடை நீக்கம்

08:54 AM Nov 28, 2023 IST | 1newsnationuser2
அதிர்ச்சி    மாணவர் தூக்கிட்டு தற்கொலை     சென்னை ஐஐடி பேராசிரியர் பணியிடை நீக்கம்
Advertisement

சென்னை ஐஐடி வளாகத்தில் கடந்த மார்ச் 31-ம் தேதி ஆராய்ச்சி மாணவர் சச்சின் குமார் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் பேராசிரியர் ஆசிஷ்குமார் சென் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

Advertisement

மாணவர்களின் தற்கொலைக்கான காரணம் குறித்து ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற டிஜிபி திலகவதி தலைமையில் அமைக்கப்பட்ட 5 பேர் கொண்ட குழு நடத்திய விசாரணையில், பேராசிரியர் ஆசிஷ்குமார் சென், சச்சின் குமாரை பல மாணவர்கள் முன்னிலையில் அவமானப்படுத்தும் நோக்கில் பேசியதால் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது.

மேற்கு வங்கத்தை சேர்ந்த சச்சின் குமார் ஜெயின் (31). சென்னை ஐஐடியில் பிஎச்டி படித்து வந்தார். இவர் நண்பர்களுடன் வேளச்சேரி பிராமின் தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி படித்து வந்தனர். கடந்த ஏப்ரல் மாதம் சச்சின் குமார் ஜெயின் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக வேளச்சேரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

Tags :
Advertisement