சூப்பர்...! மாணவர் சேர்க்கை... பெற்றோர்கள் சந்தேகங்களை தீர்க்க 14417 ஹெல்ப்லைன்...!
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் புதிய மாணவர் சேர்க்கை எண்ணிக்கை 4 லட்சத்தைத் தொடும் நிலையில் உள்ளது. மேலும், அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையில் பெற்றோர்கள் தங்களின் சந்தேகங்களைத் தீர்த்துவைக்க ஹெல்ப்லைன் - 14417 என்ற எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு அரசு நடத்தும் பள்ளிகளில் 5 லட்சம் புதிய மாணவர் சேர்க்கை இலக்கை எட்ட வேண்டும் என தீர்மானித்துள்ளது. ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர்கள் ஏற்கனவே பெற்றோரை தொடர்பு கொண்டு தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க வேண்டிய நன்மைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். புதிய சேர்க்கைக்காக கடந்த மாதம் தொடங்கிய விளம்பர பிரச்சாரத்திற்கு பிறகு அதிக அளவிலான மாணவர்கள் அரசு பள்ளியில் சேர ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஹெல்ப்லைன் எண் ‘14417’க்கு கடந்த ஒரு மாதத்தில் பெற்றோர்களிடமிருந்து 1 லட்சத்துக்கும் அதிகமான அழைப்புகள் வந்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏப்ரல் 22-26 வரை, பள்ளி நிர்வாகக் குழு பெற்றோரை தொடர்பு கொள்ள வேண்டும். தேவைப்பட்டால், ஆசிரியர்களுக்கு அந்தந்த பகுதிகளில் வீடு வீடாகச் சென்று தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்கும்படி அறிவுறுத்தல்களை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் தற்போதுள்ள மாணவர்களை அதே பள்ளியில் அட்மிஷன் செய்வதை தக்கவைக்க வேண்டும் என்பதை மாநில அரசு உறுதி செய்துள்ளது. அதே நேரத்தில், நிர்வாகம் எந்த இடைநிற்றல்களும் இல்லை என்பதை உறுதிப்படுத்தும், ”என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.