For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

எடப்பாடி பழனிசாமி மீது கடும் அதிருப்தி..!! அதிமுகவில் இருந்து விலகிய முக்கிய புள்ளி..!!

02:31 PM Apr 10, 2024 IST | Chella
எடப்பாடி பழனிசாமி மீது கடும் அதிருப்தி     அதிமுகவில் இருந்து விலகிய முக்கிய புள்ளி
Advertisement

கர்நாடகாவில் அதிமுகவை ரப்பர் ஸ்டாம்ப் கட்சியாகவே எடப்பாடி பழனிசாமி வைத்துள்ளார் என்று குற்றம்சாட்டி கர்நாடகா மாநில அதிமுக செயலாளர் எஸ்.டி.குமார், கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். பிற மாநிலங்களில் ஏன் அதிமுகவை வளர்க்க வேண்டும் என மேலிடம் நினைப்பதாக கர்நாடகா நிர்வாகிகள் வேதனை அடைந்துள்ளனர்.

Advertisement

மக்களவை தேர்தலில் யாருக்கு ஆதரவாக செயல்பட வேண்டும் என்பதை கூட கட்சி மேலிடம் கூற மறுப்பதாக குற்றம்சாட்டியுள்ளனர். ஜெயலலிதாவுக்கு பிறகு கர்நாடகாவில் இருக்கும் அதிமுக நிர்வாகிகளுக்கு கட்சி தலைமை மதிப்பளிப்பதில்லை எனவும் வேதனை தெரிவித்துள்ளது. இந்நிலையில், கர்நாடக மாநில அதிமுக செயலாளர் பொறுப்பில் இருந்து எஸ்டி குமார் ராஜினாமா செய்துள்ளார். தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாததால், அதிருப்தியில் ராஜினாமா செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Read More : BREAKING | தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி திரையரங்குகள் மூடல்..!! வெளியான முக்கிய அறிவிப்பு..!!

Advertisement