For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Srilanka: மீன்பிடித்த தமிழக மீனவர்கள் 22 பேரை கைது செய்தது இலங்கைக் கடற்படை...!

06:54 AM Mar 10, 2024 IST | 1newsnationuser2
srilanka  மீன்பிடித்த  தமிழக மீனவர்கள் 22 பேரை கைது செய்தது இலங்கைக் கடற்படை
Advertisement

நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 22 பேரை கைது செய்தது இலங்கைக் கடற்படை.

Advertisement

தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தொடர்ந்து கைது நடவடிக்கைக்கு உள்ளாகி வருகின்றனர். கடந்த இரண்டு மாதங்களில், இத்தகைய கைது நடவடிக்கைகள் மிகவும் அதிகரித்திருக்கின்றன. இக்காலத்தில் 69 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் இன்று நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 22 பேரை கைது செய்தது இலங்கைக் கடற்படை. எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக 3 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தது இலங்கைக் கடற்படை. மேலும் கைதான மீனவர்கள் அனைவரும் காங்கேசன் கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 22 மீனவர்களையும் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கச்சத்தீவு அருகில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது தொடர் நிகழ்வாக இருப்பதைத் தடுக்க ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் ஏன் எடுக்கப்படவில்லை என மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் சமிபத்தில் கேள்வி எழுப்பியது.

Advertisement