For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

மருத்துவமனையில் பார்த்தவுடன் ஸ்பார்க்..!! 13 வயது சிறுமியை நைசாக வீட்டிற்கு அழைத்துச் சென்று பலாத்காரம்..!! கிணற்றில் மிதந்த சடலம்..!!

He took the girl and went to his home in his native village near Kalkulam. He kept the girl there and raped her.
04:55 PM Oct 28, 2024 IST | Chella
மருத்துவமனையில் பார்த்தவுடன் ஸ்பார்க்     13 வயது சிறுமியை நைசாக வீட்டிற்கு அழைத்துச் சென்று பலாத்காரம்     கிணற்றில் மிதந்த சடலம்
Advertisement

சிவகங்கை மாவட்டம் கல்குளம் பகுதியைச் சேர்ந்தவர் பால்சாமி (72). இவர், கல்குளம் பகுதியில் உள்ள தோட்டத்துக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்றுள்ளார். அப்போது, அங்கிருந்த பாசனக் கிணற்றில் அடையாளம் தெரியாத இளம் பெண்ணின் உடல் மிதப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து தாலுகா காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

Advertisement

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த சிவகங்கை தாலுகா போலீசார், தீயணைப்பு வீரா்களின் உதவியுடன் உடலை மீட்டனர். அப்போதுதான், அவர் 16 வயது மதிக்கத்தக்க சிறுமி என தெரியவந்தது. மீட்கப்பட்ட சிறுமியின் வலது கை உடைந்த நிலையிலும், தலையில் காயங்கள் உடனும், ஆடைகள் கிழிந்தும் காணப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டாரா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த விசாரணையில், பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.

முதலில் சடலமாக மீட்கப்பட்ட சிறுமிக்கு வயது 13 என உறுதி செய்யப்பட்டுள்ளது. இவரின் தாயார் மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு, மதுரையைச் சேர்ந்த இளைஞர் ஒருவரின் மனைவியும் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு திருமணமாகி இரட்டைக் குழந்தைகள் பிறந்த நிலையில், ஒரு குழந்தை இறந்துள்ளது. எனவே, மற்றொரு குழந்தையின் சிகிச்சைக்காக மருத்துவமனையில் இருந்துள்ளார்.

அப்போது, இவருக்கும், இந்த 13 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சிறுமியை அழைத்துக் கொண்டு கல்குளம் அருகே உள்ள தனது சொந்த கிராமத்தில் உள்ள வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு வைத்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர், இது குறித்து உனது தாயிடம் தெரிவிக்கக் கூடாது என மிரட்டியுள்ளார். அதற்கு சிறுமி மறுப்பு தெரிவிக்கவே, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரம் அடைந்த இளைஞர், சிறுமியை கொடூரமாகக் கொலை செய்து அருகில் இருந்த விவசாயக் கிணற்றில் வீசியுள்ளார். மேலும், சிறுமி மீட்கப்பட்ட இடத்தின் அருகில் இருந்த பெட்ரோல் பங்க்கில், இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் உடன் சிறுமி இருந்ததை போலீசார் முதலில் கண்டுபிடித்துள்ளனர். இதனை வைத்து மேற்கொண்ட விசாரணையில் இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இந்நிலையில், அந்த இளைஞரைக் கைது செய்த போலீசார், அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், கைது செய்யப்பட்டுள்ள நபர், ஏற்கனவே போக்சோ வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு, 11 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டவர் என்பதும், அதில் அவர் 8 ஆண்டுகள் வரை சிறையில் இருந்தவர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Read More : குரூப் 4 தேர்வர்களுக்கு செம குட் நியூஸ்..!! காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையும் அதிரடி உயர்வு..!!

Tags :
Advertisement