For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

மகன் திருமணம் முடிந்த கையோடு மன்னிப்பு கேட்ட நீதா அம்பானி.? எதற்காக தெரியுமா?

marriage finished... neta ambani says apologies to media
07:05 AM Jul 17, 2024 IST | Shyamala
மகன் திருமணம் முடிந்த கையோடு மன்னிப்பு கேட்ட நீதா அம்பானி   எதற்காக தெரியுமா
Advertisement

ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் நடந்து முடிந்ததும் செய்தியாளர்களை சந்தித்த நீதா அம்பானி மன்னிப்பு கேட்ட சம்பவம் பேசுபொருளாகி வருகிறது.

தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்ச்சன்ட் திருமணம், கடந்த 12ம் தேதி மும்பையில் உள்ள ஜியோ உலக மாநாட்டு மையத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த திருமணத்தில் அமிதாப் பச்சன், சல்மான் கான், ஷாருக் கான், ரன்வீர் கபூர், ஆலியா பட், எம்.எஸ். தோனி உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

Advertisement

திருமணம் முடிந்ததை தொடர்ந்து, திருமண இடத்திற்கு வெளியே நின்றிருந்த ஊடகங்கள் மற்றும் பத்திரிகையாளர்களை நீதா அம்பானி சந்தித்து பேசினார். அப்போது, தங்களது குடும்பத்தை ஆதரித்ததற்காக அவர் ஊடகங்களுக்கு நன்றி தெரிவித்தார்.

இந்த திருமணத்தில் எடுக்கப்பட்ட வீடியோக்கள் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்து வருகிறது. “உங்கள் பொறுமைக்கும் புரிதலுக்கும் நன்றி என்றார். மேலும், தங்களால் ஏதேனும் தவறு நடந்திருந்தால் மன்னிக்கும்படியும் ஊடகங்களிடம் நீதா அம்பானி கேட்டுக் கொண்டார். இந்த சம்பவம் ஊடகங்கள் மற்றும் பத்திரிகையாளர்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

read more..ஆம்ஸ்ட்ராங் படுகொலை..!! நீதிவேண்டி நினைவேந்தல் பேரணிக்கு அழைக்கும் இயக்குநர் பா.ரஞ்சித்..!!

Tags :
Advertisement