For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

’சில நடிகைகள் பணத்திற்காக அப்படி பண்றாங்க’..!! ’எனக்கும் அது நடந்துருக்கு’..!! குட்டி பத்மினி பகீர் தகவல்..!!

Actress Kutty Padmini has shared some shocking information regarding sexual harassment of actresses.
10:23 AM Aug 31, 2024 IST | Chella
’சில நடிகைகள் பணத்திற்காக அப்படி பண்றாங்க’     ’எனக்கும் அது நடந்துருக்கு’     குட்டி பத்மினி பகீர் தகவல்
Advertisement

மலையாள சினிமாவில் நடிகைகளுக்கு நடக்கும் பாலியல் தொல்லை குறித்து வெளியான ஹேமா கமிட்டி அறிக்கை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழ் சினிமாவுக்கும் இதுபோன்ற கமிட்டி அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement

இந்நிலையில், நடிகைகளுக்கு தரும் பாலியல் தொல்லை தொடர்பாக நடிகை குட்டி பத்மினி சில அதிர்ச்சி தகவலை பகிர்ந்துள்ளார். தற்போது, ”தமிழ் டிவி துறையில் பாலியல் துன்புறுத்தல்கள் அதிகமாக இருக்கிறது. இதனால் பல பெண்கள் தற்கொலை கூடச் செய்து கொண்டுள்ளனர். கடந்த காலங்களில் தங்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல் குறித்துப் பேசிய சின்மயி மற்றும் நடிகை ஸ்ரீ ரெட்டிக்கு தமிழ் சினிமா தடை விதித்துள்ளது. டாக்டர்கள், வழக்கறிஞர்கள், ஐ.டி. ஊழியர்களை போல நடிப்பதும் ஒரு தொழில் அவ்வளவுதான். ஆனால், இதை மட்டும் தவறாக பார்க்கிறார்கள்.

டிவி சீரியல்களில் நடிக்கும் நடிகைகளிடம் இருந்து பாலியல் ரீதியாக இயக்குநர்களும், தொழில்நுட்ப வல்லுநர்களும் சில மோசமான விஷயங்களை எதிர்பார்க்கின்றனர். பாலியல் துன்புறுத்தலை நிரூபிக்க ஆதாரம் இல்லை என்பதால், பல பெண்கள் புகார் அளிப்பதில்லை. இன்னும் சில நடிகைகள் பணத்திற்காக இப்படி செய்கின்றனர். தமிழ் சினிமாவில் பாலியல் துன்புறுத்தல் குறித்து அளிக்கப்பட்ட புகார்களில் விசாரணை உரிய முறையில் நடத்தி முடிக்கப்படவில்லை.

பாலியல் அத்துமீறல் குறித்த கேள்விக்கு "ஆதாரம் எங்கே' என்று சுரேஷ் கோபி கேட்டதாகப் படித்தேன். பாதிக்கப்பட்டவர்கள் ஆதாரத்துக்கு எங்கே போவார்கள்? வேண்டும் என்றால் சிபிஐ போல் உண்மையைக் கண்டறியும் சோதனை நடத்தலாம்" என்றார். குழந்தை நட்சத்திரமாக இருந்த போதே தனக்கு பாலியல் துன்புறுத்தல்கள் நடந்துள்ளது. எனக்கு நேர்ந்த கொடுமை குறித்து என் அம்மா சண்டை போட்டார். இதனால் உடனடியாக அந்த படத்தில் இருந்து என்னைத் தூக்கி விட்டார்கள். இப்படிப் பல சிரமங்கள் இருக்கும் போது ஆதாரத்திற்கு எங்கே போக முடியும்”..? என்று வேதனை தெரிவித்துள்ளார்.

Read More : கொட்டிக் கிடக்கும் காலியிடங்கள்..!! புதிய அறிவிப்பை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி..!! தேர்வர்களே மிஸ் பண்ணிடாதீங்க..!!

Tags :
Advertisement