For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

விஸ்வகர்மா திட்டத்தில் பயன்பெற தமிழ்நாட்டில் 14,000-க்கும் அதிகமானோர் பதிவு...!

09:07 AM Nov 04, 2023 IST | 1newsnationuser2
விஸ்வகர்மா திட்டத்தில் பயன்பெற தமிழ்நாட்டில்  14 000 க்கும் அதிகமானோர் பதிவு
Advertisement

தமிழ்நாட்டின் 7 மாவட்டங்களில் பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் செயல்படுத்தப்படும் நிலையில் இத்திட்டத்தில் பயன்பெறுவதற்காக 31.10.2023 வரை 14 ஆயிரத்து 211 பயனாளிகள் பதிவு செய்துள்ளனர். இத்திட்டத்தில் பயன்பெற விரும்புபவர்கள் பொதுச்சேவை மையங்களின் மூலம் பதிவு செய்துள்ளனர். 31.10.2023 வரை கோயம்புத்தூர் மாவட்டத்தில் 5510 பேரும், ஈரோடு மாவட்டத்தில் 1568 பேரும், புதுக்கோட்டை மாவட்டத்தில் 2287 பேரும், ராமநாதபுரம் மாவட்டத்தில் 1282 பேரும் பதிவு செய்துள்ளனர்.

Advertisement

இதேபோல், நீலகிரி மாவட்டத்தில் 384 பேரும், திருப்பூர் மாவட்டத்தில் 1286 பேரும், விருதுநகர் மாவட்டத்தில் 1894 பேரும் பதிவு செய்துள்ளனர். இத்திட்டத்தில் பயனடைய தேர்வு செய்யப்படுவதற்கு மூன்றடுக்கு சரிபார்ப்பு நடைமுறைகள் மேற்கொள்ளப்படும்.பதிவு செய்தவர்கள் தொடர்பான மூன்று கட்ட சரிபார்ப்பு நடைமுறைகளுக்குப் பின்னர் இத்திட்டத்தில் பயனடைவதற்கான பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இத்திட்டம் 17.09.2023 அன்று பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்டது. 18 வகையான பாரம்பரிய கைவினை கலைஞர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில், 13 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சகம், திறன் மேம்பாட்டு அமைச்சகம், நிதி அமைச்சகத்தின் நிதி சேவைகள் துறை ஆகியவை இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்துகின்றன.

Advertisement