முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

மந்தமாக செல்லும் நிகழ்ச்சி..!! சண்டையை மூட்டிவிட்ட பிக்பாஸ்..!! நீ ஒரு நரி.. நீ ஒரு அமுல்பேபி..!! ரணகளமாகும் வீடு..!!

11:17 AM Nov 15, 2023 IST | 1newsnationuser6
Advertisement

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் பரபரப்புக்கு பஞ்சமில்லாத ஒரு சீசனாக உள்ளது. முதல் வாரத்தில் இருந்து பல்வேறு சண்டை, சச்சரவுகளுடன் சென்று கொண்டிருக்கும் இந்நிகழ்ச்சி தற்போது 8-வது வாரத்தில் உள்ளது. பிரதீப்பால் வீட்டில் உள்ள பெண்களுக்கு பாதுகாப்பில்லை எனக்கூறி அவரை ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பினார் கமல். பிரதீப்பின் எவிக்‌ஷனால் ரசிகர்கள் கொந்தளித்ததை போல் பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களுக்கு இடையேயும் பிரச்சனை வெடித்தது. இதனால் கடந்த வாரம் முழுவதும் மாயாவின் புல்லி கேங்கிற்கும் விசித்ரா, அர்ச்சனா ஆகியோருக்கும் இடையே சண்டை நடைபெற்றது.

Advertisement

இதையடுத்து வார இறுதியில் கமல் இருதரப்பையும் எச்சரித்ததோடு, இனி பிரதீப் விவகாரத்தை பேசக்கூடாது என திட்டவட்டமாக தெரிவித்து விட்டார். இதனால் போட்டியாளர்கள் அடங்கிப் போய் உள்ளனர். இந்த வாரம் முழுக்க ஆட்டம் மந்தமாக சென்று கொண்டிருப்பதை உணர்ந்த பிக்பாஸ் தற்போது தினேஷுக்கு சீக்ரெட் டாஸ்க் ஒன்றை கொடுத்து விஷ்ணு உடன் சண்டை போட விட்டுள்ளார்.

பிக்பாஸின் பேச்சை கேட்டு, விஷ்ணுவிடம் மல்லுக்கட்டும் தினேஷ், அவரை வெறுப்பேற்றும் விதமாக போடா அமுல்பேபி என சொல்ல, அதற்கு அவர் போடா நரி என பதிலடி கொடுக்க இதனால் பிக்பாஸ் வீடே ரணகளமாகி உள்ளது. இதுமட்டுமின்றி போட்டியாளர்கள் அனைவரும் இரண்டு இரண்டு நபர்களாக பிரிந்துகொண்டு, ஒருவரைப்போல் இன்னொருவர் உடையணிந்து கொண்டு, அவர்களைப் போல் இமிடேட் செய்ய வேண்டும் என்கிற டாஸ்க்கும் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் விஷ்ணு போல் வேடமிட்டுள்ள மாயா, அவர் சண்டை போடுவதை இமிடேட் செய்யும் காட்சிகளும் இந்த புரோமோவில் இடம்பெற்றுள்ளது.

Tags :
கமல்ஹாசன்தினேஷ்பிக்பாஸ்மாயாவிஷ்ணு
Advertisement
Next Article