For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ஒரே ஊசி..!! 10 நிமிடத்தில் முதியவர் பலி..!! சென்னையில் சிக்கிய போலி டாக்டர்..!! பெரும் பரபரப்பு..!!

01:48 PM Apr 03, 2024 IST | Chella
ஒரே ஊசி     10 நிமிடத்தில் முதியவர் பலி     சென்னையில் சிக்கிய போலி டாக்டர்     பெரும் பரபரப்பு
Advertisement

சென்னை பூந்தமல்லியை அடுத்த சென்னீர்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள். இவர் கடந்த 10 ஆண்டுகளாக சித்த மருத்துவமனை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில், உடல்நிலை சரியில்லாமல் இருந்த ராஜேந்திரன் என்ற முதியவர், இந்த மருத்துவமனைக்கு வந்த நிலையில், அவருக்கு பெருமாள் ஆங்கில மருத்துவமான ஊசி போட்டுள்ளார்.

Advertisement

இந்நிலையில், ஊசி போட்ட 10 நிமிடங்களில் ராஜேந்திரன் மருத்துவமனையிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, அங்கிருந்தவர்கள் பூந்தமல்லி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், உயிரிழந்த ராஜேந்திரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து சித்த மருத்துவம் படித்து விட்டு ஆங்கில மருத்துவம் பார்த்த சித்த மருத்துவர் பெருமாளை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவரது மருத்துவமனையில் இருந்து ஊசிகள் மற்றும் ஆங்கில மருந்துகள் ஏராளமானவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பி ஏற்படுத்தியுள்ளது.

Read More : மீண்டும் அதிமுக கூட்டணியில் இணைந்தது புரட்சி பாரதம்..!! 40 தொகுதிகளிலும் ஆதரவு..!!

Advertisement