ஜெயம் ரவியுடன் பாடகிக்கு நெருக்கமான உறவு உண்மைதான்..!! இதற்கு முக்கிய காரணமே குஷ்பு தான்..!! புது குண்டை தூக்கிப் போட்ட பிரபலம்..!!
தமிழ் சினிமா திரையுலகில் ஜெயம் ரவி - ஆர்த்தி விவாகரத்து பிரச்சனை தான் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. தன்னை கேட்காமல் தான் ஜெயம் ரவி விவாகரத்து முடிவை எடுத்தார் என்று ஆர்த்தி சொல்ல, ஆர்த்திக்கு ஏற்கனவே 2 நோட்டீஸ் அனுப்பியாச்சு.. அவர்களுடைய குடும்பத்தாருடன் கலந்து ஆலோசித்து தான் இந்த முடிவை எடுத்தேன் என்று ஜெயம் ரவி கூறியிருக்கிறார்.
அதேபோல ஜெயம் ரவி பிரபல பாடகி ஒருவருடன் தொடர்பில் இருப்பதாக பேசப்பட்டது. இதற்கு பதிலடியும் கொடுத்தார் ஜெயம் ரவி. இந்நிலையில் தான், பிரபல பத்திரிகையாளர் அந்தணன், ஜெயம் ரவியின் விவாகரத்து பற்றி பேசியுள்ளார். அவர் கூறுகையில், ”ஜெயம் ரவி - கெனிஷா இணைந்திருக்கும் புகைப்படத்தை வைத்து கிளம்பிய கிசுகிசுவை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால், அவர்களுக்கு நெருக்கமானவர்களிடம் விசாரித்த போது அதில் உண்மை இருப்பதாக கூறுகின்றனர்.
முதலில் இந்த விவாகரத்தை ஆர்த்தி தான் டார்ச்சர் செய்தார். அதனால், ரவி வெளியே வந்துவிட்டார். ஆனால், இப்போது விசாரித்து பார்க்கும்போது, ரவிக்கு நெருக்கமான உறவு அந்த பாடகியுடன் உள்ளது என்றும், இருவருமே கோவாவுக்கு சென்று தங்கி இருந்ததாக சொல்லப்படுகிறது. மேலும், ரவியின் காரை கோவாவில் கெனிஷா பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.
அது உண்மையா பொய்யா என்று தெரியவில்லை. ஆனால், முழுக்காரணமும் ஆர்த்தி தான் என்று சொல்லப்படுகிறது. இதில் குஷ்பூ தான் இருவரின் திருமணத்திற்கு முக்கிய காரணம். அவர் இறங்கி வந்து இரு தரப்பிலும் பேச வேண்டும். ஆனால், இப்போது அவர் எங்கே என்று தெரியவில்லை என அந்தணன் தெரிவித்துள்ளார்.
Read More : 3 மாதங்களில் அடுத்தடுத்து 3 என்கவுன்ட்டர்..!! அதிரடி காட்டும் காவல் ஆணையர் அருண்..!!