For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

'நீ செத்து போன காக்கா டி..' உனக்கெல்லாம் நல்ல சாவே வராது!! - நடிகையை திட்டி தீர்த்த பாடகி சுசித்ரா!!

Singer Suchitra has responded to Kasthuri who slandered her parents' death.
12:14 PM Jun 30, 2024 IST | Mari Thangam
 நீ செத்து போன காக்கா டி    உனக்கெல்லாம் நல்ல சாவே வராது     நடிகையை திட்டி தீர்த்த பாடகி சுசித்ரா
Advertisement

தமிழ் சினிமா20 ஆண்டுகளுக்கும் மேலாக தென்னிந்திய சினிமாவில் பாடகியாக பயணித்து வருகிறார் சுசித்ரா. இவர் நடிகர் கார்த்திக் குமாரை 2005 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு, 12 ஆண்டுகள் ஒன்றாக தான் வாழ்ந்த நிலையில், சுசி லீக்ஸ் பிரச்சனையால் இருவரும் பிரிந்தனர். சுசி லீக்ஸ் பிரச்சனைக்கு பிறகு தலைகாட்டாமல் இருந்த சுசித்ரா கடந்த மாதம் பேட்டி அளித்திருந்தார்.

Advertisement

அவர் அளித்த பேட்டியில், திரைத்துறையை சேர்ந்த பலரைப் பற்றியும் அவதூறான கருத்துகள், விஷயங்களை சுசித்ரா பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து நடிகை கஸ்தூரி தன்னுடைய சோசியல் மீடியா பக்கம் மூலம் போஸ்ட் ஒன்றைப் பகிர்ந்து இருந்தார். "மற்றவர்கள் மீது வீண் குற்றங்களை சுமத்தி வருகிறார். அவருக்கு உடனடியாக மருத்துவ உதவி மற்றும் மனநல உதவி தேவைப்படுகிறது. அவரை வழிகாட்ட சரியான ஒரு துணை இல்லாததால் தான் வீடியோ மூலம் வாய்க்கு வந்தது எல்லாம் பேசி வருகிறார்.

கார்த்திக் குமாருக்கும் சுசித்ராவுக்கும் திருமணம் நடைபெறும்போதே சுசித்ராவின் பெற்றோர் உயிருடன் இல்லை. அவர்கள் இருவரும் தற்கொலை செய்து கொண்டார்கள். அவர்களின் குடும்பம் அடிப்படையிலேயே எந்தப் பிரச்சினையையும் சமாளிக்க முடியாமல் உயிரை மாய்த்து கொள்ளும் அளவுக்கு சென்றவர்கள். அதே போல சுசித்ராவுக்கும் வழிகாட்ட சரியான ஒரு நபர் இல்லை என்பது தான் பிரச்சினை" என கஸ்தூரி நீளமான போஸ்ட் மூலம் சுசித்ராவை பயங்கரமாகத் தாக்கி இருந்தார்.

கஸ்தூரி இதை பேசி ஒரு மாதமான நிலையில், பாடகி சுசித்ரா இதற்கு தனது யூடியூப் தளத்தில் பதிலடி கொடுத்துள்ளார். அதில்,  "நிச்சயமாக இது உண்மை இல்லை. எங்க அம்மா அப்பாவைப் பற்றி தப்பா பேசிய அந்த அம்மாவுக்கு அசிங்க அசிங்கமா சாவு வரப்போகுது. கஸ்தூரியை என்னென்ன கெட்டவார்த்தைகளால் திட்டலாம் என யோசித்துக் கொண்டு இருக்கிறேன். காக்காவ விட மோசமானவ நீ. நீ செத்து போன காக்கா போடி.. அப்படினு தான் சொல்ல தோணுது.

எங்க அம்மா அப்பா பத்தி சொன்னது உண்மையில்லை. அவங்க ஒரு ஆக்சிடெண்டில் இறந்து போனாங்க. அவங்களை பத்தி இப்படி தப்பா பேசுறது சரியில்லை. கஸ்தூரி திரும்பவும் ஸ்கூலுக்கு போய் மாரல் சயின்ஸ் கிளாஸ் அட்டென்ட் பண்ணு" என சுசித்ரா கொந்தளித்துள்ளார்.

Read more ; அன்று கேப்டனாக தோல்வி.. இன்று பயிற்சியாளராக வெற்றி!! – ராகுல் டிராவிட் உருக்கம்!!

Tags :
Advertisement