For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

வரும் 25ஆம் தேதி சென்னையில் படப்பிடிப்புகள் ரத்து..!! என்ன காரணம் தெரியுமா..?

Shooting on the 25th has been canceled following the death of stunt artist Yehumalai.
09:11 AM Jul 23, 2024 IST | Chella
வரும் 25ஆம் தேதி சென்னையில் படப்பிடிப்புகள் ரத்து     என்ன காரணம் தெரியுமா
Advertisement

ஸ்டன்ட் கலைஞர் ஏழுமலை உயிரிழந்ததை அடுத்து வரும் 25ஆம் தேதி படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Advertisement

சென்னையில் கார்த்தி நடிக்கும் 'சர்தார் 2' படப்பிடிப்பு நடந்து வருகிறது. கடந்த வாரம் படப்பிடிப்பின்போது நடந்த விபத்தில் ஸ்டன்ட் கலைஞர் ஏழுமலை பரிதாபமாக உயிரிழந்தார். 20 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த ஏழுமலை, மார்பு பகுதியில் அடிபட்டு ரத்தக்கசிவு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, படப்பிடிப்புகளில் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் வரும் 25ஆம் தேதி சிறப்பு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

இதனால் சென்னையில் மட்டும் அன்றைய தினம் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பெப்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், "படப்பிடிப்பு நடக்கும் போது தகுந்த பாதுகாப்பு கருவிகள், ஆம்புலன்ஸுடன் கூடிய மருத்துவ வசதிகள் அளிக்கப்பட வேண்டும் என்று தயாரிப்பாளர்களுக்குத் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வருகிறோம்.

ஆனால், பெரும்பாலான நிறுவனங்கள் இதை பின்பற்றுவதே இல்லை. இதனால், சங்க உறுப்பினர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வரும் 25ஆம் தேதி கமலா திரையரங்கில் காலை 9 மணிக்கு சிறப்பு கூட்டம் நடக்கவிருக்கிறது. அனைத்து சங்க உறுப்பினர்களும் கலந்து கொள்ள ஏதுவாக, சென்னையில் உள்ளூர் படப்பிடிப்புகள் (சின்னத் திரை, பெரியதிரை) நடைபெறாது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More : சொந்த வீடு கட்ட வேண்டுமா..? இப்படி தெய்வ வழிபாடு செய்யுங்க..!! நல்லதே நடக்கும்..!!

Tags :
Advertisement